திங்கள், 29 நவம்பர், 2021

172. என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.

என் ஆன்மாவின் தேடும் நீர்மூழ்கிக்கப்பல், லோகாயத குறிக்கோள்களெனும் இருண்ட வாயுப்பிரதேசத்தை விட்டு வேகமாக விலகி, வழித்தடமற்ற பிரபஞ்சப் பேருணர்வெனும் ஆழமான பிரதேசத்திற்குள் ஆழ்ந்து தாவியது. 

திமிங்கிலத்தைப் போல நீந்தி, என் மனோ நீர்மூழ்கிக்கப்பல் மிகவும் அடியாழமான சூட்சுமக் கடல் பிரதேசத்திற்குள் உன்னைத் தேடிச் சென்றது. மிகுந்த தேடலினால் களைத்த என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பலின் தேடும் ஒளிக்கண்கள், திடீரென உன் அருளாசியினால் புலனாதீத சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கியது; நான் உன் இருப்பினை எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள ஆரம்பித்தேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
172 My soul-submarine is searching for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 28 நவம்பர், 2021

171. உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.

தவிர்க்கமுடியாத நிகழ்வுகளின் பிரளயகால மேகங்கள் வந்து இடிஇடித்தன; அற்பமான சுகங்களாலும் நையப்புடைக்கும் சோதனைகளாலுமான மழை அடையாய்ப் பெய்து என் தைரியத்தாலான மண்நிலத்தை நன்கு நனைத்து மூழ்கடித்தது; பலகோடி இடைஞ்சல்கள் என்னைக் குத்துவதற்குத் தயாராக அழிவெனும் கத்தியுடன் முளைத்தன. 

எதிர்ப்பாராத விளைவுகளெனும் பீரங்கி குண்டுகள் அதிரடி செய்யும்போதும், துன்பங்களெனும் துப்பாக்கி ரவைகள் என்னைச் சுற்றிலும் வேகமாக வந்து விழும்போதும், நான் உன் என்றுமழியாக் கரங்களாலான துளைக்கமுடியாத கோட்டையினுள் காக்கப்பட்டுள்ளேன் என்பதை நீ எனக்கு உணருமாறு செய். 

கடும்போராட்டமெனும் இருண்ட மரத்தின்மீது உன் பாக்கியமெனும் ஒளி வந்து விழும்போது, அதன் மலர்கள் நன்கு மலர்ந்து நன்றியைப் பிரதிகூலமாகக் காட்டி, உன் அருட்கருணையின் ஜோதியை வரவேற்பது எளிது. 

துர்பாக்கியமெனும் இருண்ட இரவுகளிலும், என் நன்றி மலர்கள் புனிதமான அமைதியெனும் உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை வீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
171 I want to pour the scent of gratefulness at Thy feet.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 26 நவம்பர், 2021

159. பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

நான் அமைதிக்கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தேன். கண், காது, சுவை, நுகர்வு, தொடுவுணர்வு ஆகிய மினுமினுக்கும், கவனத்தைக் குலைக்கும் மின்பல்புகளை அணைத்தேன்; ரத்தத்தை-சுத்தீகரிக்கும் மூச்சினைச் சத்தம் செய்யாமல் இயங்குமாறு பணித்தேன். தெய்வத்தாயே, உன் காலடிச்சப்தம் கேட்டவுடன், என் பலகோடி உயிரணுக்களை ஸ்தூல ரத்தத்தினால் அடிமைப்படுத்தும் இதயத்தை நான் அவ்விதம் செய்யாமல் இருக்கச் சொன்னேன், ஏனெனில், நீ வரும்போது உன்னுடன் உயிரளிக்கும் ஆன்மீகக்கதிர்கள் நிரம்பிய குவளையை ஏந்தி வந்தாய். 

தெய்வத்தாயே, அவைகளால் எனக்கு மேன்மேலும் ஊட்டிவிடு! இதயம்,  உயிரணுக்கள், மனம், எண்ணங்கள் ஆகியன இனி தேய்மானம் அடையாது, ஏனெனில், உன் நிரந்தர உயிரினால் சாகாத்தன்மை பெற்றதால்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
159 Demand to be fed with Cosmic Rays.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 25 நவம்பர், 2021

156. மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

வரம்பற்ற பேருணர்வே, உன் இருப்பு கதகதப்பான சூரியனின் கதிர்களிலும், குளிர்ந்த நிலவொளியிலும் சமமாக மேவி அவைகளின் பின் மறைந்துள்ளது. அந்த ஒளிமண்டலங்கள், அழகிய இயற்கைக்கன்னியின் பொருள்களாலான மேலாடையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதேயன்றி உன்னைக் காட்டுவதில்லை; எனவே, அவைகள் என்னைப் பொறுத்தவரை இருட்டிற்குச் சமானம். இவ்விதமாக, சர்வத்தையும்-பிரகாசிக்கும் உன் பெருஞ்ஜோதி பொருட்களை-பிரகாசிக்கும் ஒளிமண்டல இருளிற்குப் பின்னால் மறைந்துள்ளது. இந்த இருளை விலக்கு! நான் சுய இருளினால் சூழப்பட்டு, என் கண்களை மூடி அமர்ந்திருக்கையில், மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பின் பிரகாசம் என்னுள் சுடருமாறு செய்; அந்த ஒளியின்மூலம் நான் உன்னை வழிபடும் கண்களால் தரிசிப்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
156 Demand for the rising of the Aurora of Intuition.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 24 நவம்பர், 2021

155. கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்தினைக் காண எனக்கருள். அது என் மனிதக்கண்களின் முன் அல்லும் பகலும் பிரகாசிக்கட்டும். வெகுகாலமாய் லோகாயத விஷயங்களின் பொய்யான-ஜொலிப்பில் என் கண்கள் குருடாகியுள்ளன. நான் அவைகளை எப்போதும் வெளிமுகமாகவே பார்த்து வந்ததால், அவற்றின் உள்ளேயுள்ள பேருணர்வைப்  பார்க்க இயலவில்லை. நான் பொருட்களெனும் கடுகு-விதைகளைத்தான் கண்டேனேயன்றி, அதனுள்ளே மறைந்திருக்கும் பேருணர்வெனும் எண்ணெயைக் காணவில்லை. ஞானதிருஷ்டி அளிக்கும் என் மூன்றாம் கண் இப்போது திறந்து கொண்டுள்ளது. அதை, நீ எப்போதும் திறந்தே வைப்பாயாக. மெய்யுணர்வின் அந்த ஒருமைக்கண் என்னைப் பொருட்களின் திரையை  ஊடுருவி, கிறிஸ்துவின் [கூடஸ்த சைதன்யத்தின்] வரம்பற்ற இருப்பை எல்லாவிடங்களிலும் காணுமாறு செய்வாயாக. என் புனித, அறிவார்ந்த எண்ணங்கள், இந்த ஞான நட்சத்திரத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்று, எல்லாவற்றிலும் கிறிஸ்துவை சந்திக்குமாறு எனக்கருள்வாயாக. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
155 Demand for the opening of the spiritual eye, the Eastern Star of Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 22 நவம்பர், 2021

154. என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.

நான் தீயன கேட்காமலிருக்க, தீயன பார்க்காமலிருக்க, தீயன பேசாமலிருக்க, தீயன கனாக்காணாமலிருக்க, தீயன எண்ணாமலிருக்க, தீயன உணராமலிருக்க எனக்கருள். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
154 Keep me away from evil.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

153. என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.

நான் நல்லவற்றைத் தவிர வேறெதையும் காணாதவாறு எனக்கருள். நான்  சுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் தொடாதவாறு எனக்குக்கற்பி. நான்  உன் குரலை மட்டுமே எல்லா நற்சொற்களிலும் கானத்தின் இனிமையழகிலும் கேட்குமாறு என்னைப் பழக்கு. பேருணர்வின் மலர்களிலிருந்து வீசும் தூய மணத்தை மட்டுமே நுகருமாறு என்னை வழிநடத்து. ஆன்ம-புஷ்டியளிக்கும் முழுமையான ரசத்துடனுள்ள உணவை உண்டுகளிக்க என்னை அழை. உன் தொடுதலை நினைவுபடுத்துவதையே நான் தொடுமாறு எனக்குக்கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
153 Teach me, that my senses may contact nothing but the good.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 20 நவம்பர், 2021

151. என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.

என்னால் என்னை ஆட்கொள்ள நீ எனக்குக்கற்பி. என் ஐம்புலக் குதிரைகளை மனக்கடிவாளத்தினால் பூட்டி, என் விவேகமெனும் தேரோட்டி அவைகளை நன்கு வழிநடத்த நீ எனக்கு அருள்புரி. என் ஜீவாத்மா, இந்த உடம்பெனும் சிறு தேரில், ஒழுக்கமெனும் சக்கரங்களுடன், பற்பல பூலோக-ஜென்மங்களெனும் வேகவழிப்பாதைகளில் வெற்றிகரமாக சுற்றி, இறுதிப் பந்தயத்தின் கடைசிச் சுற்றில் ராஜாதிராஜனின் வரம்பற்ற அரசத்தேரில் தான் பத்திரமாக அமர்ந்திருப்பதை உணரும்வரை, ஓடிக் கொண்டேயிருக்கட்டும்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
151 Lead my body-chariot on the right path (Inspired by the Hindu Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

149. இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

மாயமோகத்தினாலான இருண்ட காட்டில், நான் பக்தியெனும் நெருப்பைப்  பற்றவைத்தேன், ஆனால் புகைமூட்டத்தினால் அதன் தீ வளர்வது தடைப்பட்டது. பின்பு, நீ வந்து சில பலவீனங்களுக்குத் தீ வைத்தாய். உன் நெருப்பு சீக்கிரமாகப் பரவி, என் ஆசைகளெனும் முட்செடிகள், டாம்பீகமெனும் நெட்டையான மரங்கள், முரட்டுத்தனமெனும் அடர்ந்து மண்டிய புதர்கள் என இவையாவற்றின் மீதும் விரிந்தது. என் இருளினாலான முழு காடும் எரிகின்றது; உன் ஒளியை நான் எல்லாத்திசைகளிலும் காண்கின்றேன். இறைத்தந்தையே, உன் உதவிக்கு நான் நன்றிகூர்கின்றேன். நான் அனைவருக்காகவும் ஒளியினாலான பாதையை உருவாக்க விரும்புகின்றேன் - எனக்கு நீ இப்போது உதவியது போல் எப்போதும் உதவு!

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
149 Demand to set fire to the forest of darkness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 18 நவம்பர், 2021

148. நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.

உன் வருகையை எதிர்நோக்கி என் இதயத் தோட்டத்தில் என் பக்தி மலர்கள் மலரட்டும். அம்மலர்களை மாலையாய்க் கோர்த்து, அதை உனது பாத சரணங்களிலே சமர்ப்பிப்பேன்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
148 I offer Thee a garland of devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!