வியாழன், 19 நவம்பர், 2020

34. என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.

நான் என் இறந்தகாலத்தை எரித்து சாம்பலாக்கினேன்; அரும்பும் விதியினின்று முளைக்கும் வருமுன்னர் உரைக்கும் விதைகளை ஒதுக்கித்தள்ளினேன். இறந்தகால, எதிர்கால பயங்களெனும் சிதறிக்கிடந்த சாம்பல்களுக்கு இடையே நான் சிரமப்பட்டு அவற்றைக் கடந்து சென்றேன்.

நான் என்றும் இருக்கும் நிகழ்காலம். நான் என் இச்சா சக்தியின் கூர்மையினால், அறியாமை வலைக்கூடுகளை நார்நாராக கிழித்து எரிந்துவிட்டேன். 

இப்பொழுது, நான் உன் நிரந்தரத்தின் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, கணக்கிடமுடியாத காலப்பாதையின் வழியே நான் மிதந்து செல்கிறேன். இயற்கை ஈந்த என் இறக்கைகளின் அழகினை  எல்லாப்பக்கங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப் படுத்துகிறேன். சூரியர்கள், விண்மீன் துகள்கள் என் இறகுகளில் விரவிக் கிடக்கின்றன. பார், என் அழகை! உன்னை ஏமாற்றிக் கட்டும் அனைத்து பட்டுநூல் பின்னல்களையும் அறுத்து ஏறி! நான் என் அகத்துக்குள்ளே பறந்து செல்வதைப் போல் நீயும் அதனைப் பின்பற்று!   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
34 Make me Thy Butterfly of Eternity
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!     

கருத்துகள் இல்லை: