புதன், 17 நவம்பர், 2021

147. அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

நான் என் சுய இச்சாசக்தியை உபயோகிக்க விரும்புகின்றேன்; ஆனால், இறைத்தந்தையே, அதை நீ பூரண திருப்தியெனும் பொன்மய சொர்க்கத்திற்கு வழிநடத்து. நீ என்னைப் பலனற்ற ஆசையாலும், தளரும் நம்பிக்கையாலுமான சிறைக்கதவுகளுக்குப் பின்னால் என்னைக் குறுக்கி அடைக்காமல் இருப்பதை அறிவதனால், நான் அனந்தத்தின் ஆனந்தக்குழந்தையாக இருப்பேன். 

நான் பழிக்கத்தகு சோம்பல் சங்கிலிகளை உடைத்தெறிவேன். அதனால், பயமற்ற சுதந்திரத்துடன் அடியெடுத்து வைத்து, குறுக்கங்களும், மாயமோகங்களுமாலான காட்டினை மின்னல்போல் கடந்து செல்வேன்.

என் புல்லிய அஹங்காரம், "என் பெருமையைக் காண்! என்னை வழிபடு!" என மதம்கொண்டு பீற்றுகிறது. ஆனால், நான் அதன் மாயத்தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, கற்பனைக்கெட்டாத அழகுடைய மற்றொரு ரூபத்தைக் காண்பேன். அமைதியுடன் இயைந்த என் ஆன்மக் காதுகளால், உன்னைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் அந்தத் தூசிநிகர், மார்தட்டும் மாயவித்தைக்காரனைக் கேட்பதைத் தவிர்த்து, உன் ஒப்பரியாத குரலினால், "நானே அவன்!" என்று காலங்காலமாக சன்னமாக ஒலிக்கும் பிராணவாயுச் சிறகுகளுடன் கூடிய மணங்கமழும் சங்கீதத்தை நான் மனம் லயிக்கக் கேட்பேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
147 Demand not to be enslaved by the ego or by passivity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: