ஞாயிறு, 29 நவம்பர், 2020

184. அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.

ஓ பராசக்தித் தாயே! நான் உன் குரலால் இச்செய்தியைச் சொல்லக் கேட்டேன், "நீ வெகுகாலமாய் தவறான மனிதப் பழக்கங்களாலான கூட்டினில் அடைப்பட்டுக் கிடக்கிறாய். பட்டுஇழைகளை சேகரிக்கும் அந்தகன் வந்து உன்னை அழிக்குமுன்னர், நீ சீக்கிரம் வெளியே வா! மயக்கமுறுத்தும், சொகுசு தரும், கவரும் பழக்கங்களெனும் பட்டுக்கயிறுகளால், நீ காலனின் பிரத்தியேக  அறைக்குள் பிணைக்கப்பட்டுள்ளாய். 

"வெளியே வா! தவறுதலாக, பலவீனத்தைத் தன் சுபாவமென எண்ணி உறங்கும் மனிதப் புழுவாய் இருப்பதை விட்டொழி. மோகக் கூட்டிலிருந்து வெளியே வா! உன் வேண்டுதல்களையும், குறிக்கோள்களையும் ஆன்மீகப்படுத்தி, அதன் மூலம்  உன் இறகுகளில் வரம்பற்ற சக்தியையும், தேஜஸையும் பெருக்கி, அவைகளை விரித்துப் பரப்பு.

"வெளியே வா! நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் நீ ஆகு! இயற்கையின் எண்ணற்ற அழகுகளினால் உன் உணரும் இறகுகளை அலங்கரித்துக் கொள்; அவைகளைக் கொண்டு விண் முழுதிலும் எல்லாப்புறங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப்படுத்து.

"எல்லையற்ற வானவெளியில் உன் அழகிய இறகுகளினால் சிறகடித்துப் பறந்து செல்; அழகை ஆராதிக்கும் அனைவரையும் ஈர்த்து உன் கவின்மிகு அழகினை ரசிக்கச் செய். சூரிய-விண்மீன் பொறிகள் உன் இறகுகளினில் மினுமினுக்கும்; நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய், ஆனந்த மார்க்கத்தில் நீ சிறகடித்துப் பறக்கும்போது, உன் வழியில் தென்படும் நெஞ்சங்களினில் உள்ள கலக்கத்தை எல்லாம் அது துரத்தியடிக்கும்."  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
184 Cutting through the Cocoon of Ignorance
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

வெள்ளி, 27 நவம்பர், 2020

33. ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல்.

எங்கள் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஒரு ஒளிச் சந்நிதியை அடைய பல நிஜ வழிகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். எல்லா மதநம்பிக்கைகளெனும் துணைவழித் தடங்களும் ஒன்றுகூடும் பொதுவான ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையை எங்களுக்குக் காண்பி. 

வேறுபட்ட மதங்கள் மெய்ம்மையெனும் உன் ஒரே மரத்தின் கிளைகள் தான் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட எல்லா ஆகம போதனைகளாலான கிளைகளிலும் தொங்கும், அறிவால் சோதிக்கப்பட்ட, கனிந்த, இனிமையான ஆத்மஞானப் பழங்களை நாங்கள் புசித்துமகிழ எங்களுக்கு அனுக்கிரகம் செய். 

உன் அமைதிக் கோயிலில் நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. எங்கள் அந்த ஆன்ம கீதம் நீ உன் அமைதிச் சபதத்தை மீறி, அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் நீ எங்களைத் தூக்கி அமர்த்தத் துணைபுரியட்டும்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
33 Demand to travel on the one Highway of Realization
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

புதன், 25 நவம்பர், 2020

185. நான் நிரந்தரத்திலிருந்து நிரந்தரத்திற்கு தாவுவேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் நிரந்தரத்திலிருந்து நிரந்தரத்திற்கு தாவுவேன்.

உன் மரணமற்ற ஒளிப்பொறியினால் மின்னும் என் பொன்மய நீராவி போன்ற சூட்சும உடல், பிரபஞ்ச இருப்பின் ஒரு புல்லில் இருந்து இன்னொரு புல்லிற்கு தாவிக் கொண்டுள்ளது.

வெட்டவெளி நிரந்தரத்தை நீ மாறிமாறித் தோன்றும் பலவண்ண நிறங்களாலான பசும் புற்களைக் கொண்டு ஆடையாகப் போர்த்தியுள்ளாய். நான் ஒவ்வொறு புல்லாக எல்லாவற்றையும் தாவிக் கடந்து செல்வேன். உன் காக்கும் அபயக்கரங்களில் வந்துபுகும் வரை நான் ஒரு சுகப் புல்லிலிருந்து மற்றொன்றிற்கு குதூகலத்துடன் குதித்துக் கொண்டே இருப்பேன். உன் அழகின் உயிரோட்டமுள்ள இழைகளினால் என் கள்ளமற்ற அழகிய இறகுகள் பின்னப்பட்டுள்ளன. உன் என்றும் மாறா சாம்ராஜ்ஜியத்தை நான் வந்தடையும் வரை, என்னை விடாமல் துரத்திக் களங்கப்படுத்தும் ஒவ்வொரு மாற்றத்தின் பிடியினின்றும் நான் பிடிபடாமல் தப்பிச் செல்வேன்.  

பிரபஞ்ச வளர்ச்சிப் பிறப்புகளெனும் மெதுவாய் நடைபோடும் ஒட்டகங்களில் ஏறி, இறப்புகளெனும் பாலைவனங்களைக் கடந்து, கடைசியில் உள்ளிருந்து சுரக்கும் உன் ஞானமெனும் மிருதுவான மெத்தையை அடைவதற்காக, இந்த பிராண சரீரம் ஒரு லோகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிமாறிப் பயணித்துக் கொண்டுள்ளது.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
185 I will hop from Eternity to Eternity
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

செவ்வாய், 24 நவம்பர், 2020

53. என் கனவுகளின் கடலின் நடுவே உடைபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் கனவுகளின் கடலின் நடுவே உடைந்து இடிபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று.

என் கனவுகளின் கடலின் நடுவே நான் பயணிக்கும் படகு உடைபட்டது. என் இன்பசுகத் தாங்கி உடைந்து நொறுங்கி விட்டது. அச்சமுறுத்தும், சோகமான இருண்ட கனவுகளின் கடல்நீரினூடே நான் மிக்க சிரமத்துடன் தத்தளித்து நீந்தினேன். உன் கருணைக் காற்றினால், ஒரு நம்பிக்கை நல்கும் சிறுதுடுப்பு என்னருகே மிதந்து வந்தது! அதை உடனே பற்றி இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டேன்!

கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக மிதந்து கடைசியில் சுகமான அமைதியெனும் பொன்மயத் தீவினை அடைந்தேன். உன் அனுக்கிரகக்  கடல்தேவதைகள் அங்கு குழுமி, என்னை நிரந்தர பாதுகாப்புள்ள உன் சாந்நித்தியத்திற்கு அழைத்துச் செல்ல வந்துசேர்ந்துள்ளனர்.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
53 Save me from shipwreck on the Ocean of my Dreams
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!        

திங்கள், 23 நவம்பர், 2020

65. நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி.

என் மனசாம்ராஜ்யம் குழப்பக் குப்பையால் மண்டிக் கிடக்கிறது. என் ஆன்ம அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட நகரத்தில் உன் சக்தி மழையைப் பொழி. என்னுள்ளே இருக்கும் கொடூரமான ஆன்ம அறியாமையை முற்றிலும் அகற்ற, உன் கருணை நீரோட்டத்தை வெள்ளமாக அனுப்பு. உன் அன்பின் பெருமழை வெள்ளம் நிற, ஜாதி, இன வேற்றுமைத் தடைகளை அடித்துத் தள்ளட்டும். 

அழுக்கடைந்த, சீர்மையில்லா என் எண்ணக்குழந்தைகளை உன் ஞானப் பொழிவினால் குளிப்பாட்டு.

என் கரடுமுரடான இருண்ட வாழ்க்கைப் பாதையில், உன் அன்பு ரோஜா மலர்களினால் தூவப்பட்ட கம்பளத்தை விரி. உன் சுகந்த மணத்தை நுகர்ந்துகொண்டு, மிருதுவான மலர்ப்பாதையில் நடைபோட்டு, விரைவில் உன் ரோஜா அரண்மனைக்கு வந்துசேர்வேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
65 May the showers of Thy love flood through the walls of Color, Class, and Race-Prejudice
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       

ஞாயிறு, 22 நவம்பர், 2020

190. ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய்.

பார்வையற்ற மனிதன் ஒளியின் அழகையும், மகத்துவத்தையும் பார்த்து ரசிக்க முடியுமா? காதுகேளா மனிதன் தெய்வீகக் குரல்களால் இசைக்கும் பண்களைக் கேட்டு ரசிக்க முடியுமா?

எங்கள் தந்தையே! தற்காலிகப் புலனின்பங்களால் கண்மறைக்கப்பட்டவன், எப்படி சுயஒழுக்கச் சூரியனின்று தோன்றும் ஆரோக்கிய, அழகுக் கதிர்களைக் கண்டுகொள்ள முடியும்? 

தந்தையே, ஒரு பெரும் செல்வந்தன் ஆனால் ஆன்மீகச் செவிடன் எப்படி புனித ஆன்மாவின் உன்னத குணங்கள் எழுப்பும் சாந்தி தரும் விண்ணுலக இன்னிசையைக் கேட்க முடியும்? 

நற்குணங்களின் ஒளியால், அறவினை தீவினையைக் காட்டிலும் அதிகப் பொலிவும் இனிமையும் உடையதெனக் காணுமாறும், உன் வழிகாட்டும் குரலை மற்ற எல்லா சத்தங்களுக்கும் மேலாக கேட்குமாறும்  எங்களுக்கு அனுக்கிரகம் செய்.   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
190 Cure Spiritual Deafness and make me listen to the chorus of Noble Qualities
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       

சனி, 21 நவம்பர், 2020

46. நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய்.

உன் நெஞ்சச் சுடரிலிருந்து, பிரபஞ்சத் தோற்றத்தின் ஒளிப்பொறிகள் ஆதியில் வெளிப்பட்ட போது, உருவாகப்போகும் உலகங்களை எதிர்நோக்கிப் பாடும் ஒளித்தோரணங்களுடன் நானும் சேர்ந்து பண்ணிசைத்தேன். 

நான் உன் பிரபஞ்ச நெருப்பின் ஒரு தீப்பொறி.  நீ வாழ்வின் சூரியன், உயிர்ப்பொறி திரவத்தால் நிறைந்துள்ள எங்கள் அநித்தியமான மனக்குவளைகளில் நீ எட்டிப்பார்க்கையில், எங்கள் பொன்மயமான சிறு மனித உணர்ச்சிகளில் அகப்பட்டுக் கொண்டாய். 

அழியும் தன்மையுடைய மாறிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் தசைக் கண்ணாடிகளிலும், நான் உன் எங்கும்நிறை சக்தியின் சஞ்சலமான நாட்டியத்தைக் காண்கிறேன். சலசலக்கும் வாழ்க்கை ஏரியில், நான் உன் சர்வ வல்லமை கொண்ட வாழ்வினைக் காண்கிறேன்.

என் சாந்தமான மன ஏரியின் மேல் ஆரவாரித்து எழும் சஞ்சல ஆசைப் புயல்களை, நான் என் கவன ஒருமுகத்தினால் அவற்றைத் தடுத்து நிறுத்த, கிறிஸ்துவிற்கு கற்றுவித்ததைப் போல எனக்கும் நீ கற்றுக் கொடு. சலனமற்ற என் ஆன்ம ஏரியில், நான் உன் அசைவற்ற, அமைதியான முகத்தைத் தரிசிக்க விரும்புகிறேன். என் வாழ்வாகிய சிறு அலையின் எல்லைத் தடுப்பை உடைத்து விடு, உன் அளப்பரிய பெருவெளி என்மேல் பரவட்டும்.

என் இதயம் உன் நெஞ்சில் துடித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உணரச்செய். நீயே என் கால்கள் மூலம் நடக்கின்றாய், என் மூச்சின் வழியே சுவாசிக்கின்றாய், என் கைகள் மூலம் செயலாற்றுகின்றாய், என் மூளையில் எண்ணங்களைக் கோர்க்கின்றாய் என்பதனையும் நான் உணரச்செய். நான் அழுது பெருமூச்சு விடுகையில் உன் உறங்கும் சுவாசம் விழிப்படையும். உன் லீலா விநோதத்தினால், உன் கனவுக்குமிழ்களாலான பிரபஞ்சம் எனை மயக்கிக் குழப்பும் உறக்கத்திலான அறைக்குள் மிதக்கின்றன.  

உன் விண்மீன் மழையான இச்சா சக்தியே என் இச்சை வானில் பொழிகிறது. நீ தான் நானாக ஆகியுள்ளாய் என்பதை எனக்கு உணர்த்து. ஓ, என்னை நீயாகவே ஆக்கிக் கொள்; நானெனும் சிறுகுமிழ் உன்னுள்ளே மிதப்பதை நான் காணுமாறு செய்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
46 Let me feel that Thou and I art One
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!      

வெள்ளி, 20 நவம்பர், 2020

120. உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப் பராமரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப் பராமரி.

அனாதைகள், துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உன் குணப்படும் சக்தியைக் கேள்விப்பட்டுள்ளார்கள். அவர்கள் உன் வாசலுக்கு வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை வெறும்கையுடன் திருப்பி அனுப்பலாமா? 

சோகத்தாலும், பயத்தாலும் பீடிக்கப்பட்டு நெஞ்சுடைந்து அவர்கள் சிந்தும் எரிக்கும் கண்ணீர்த் துளிகளை, உன் கண்ணுக்குப் புலனாகா கரங்களால் துடைத்து உலர்த்துவாயாக.

மோகக்குழப்பத்தால் வழிதொலைந்தவர்கள் உன்னைத் தவிர வேறு யாரிடம் செல்வார்கள்? உன்னைப் பார்க்கமுடியாமல் மறைக்கும் திரையை விலக்கு, உன் எல்லாம்வல்ல பேரருள் முகத்தைக் காட்டு. 

நீ தோன்றும் விடிவுகாலம் நெருங்கும்போதே, அவர்களின் இருண்ட கவலைகள் சுவடின்றிப் பறந்து ஓடிவிடும். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
120 Receive the orphans and the stricken, who have come to Thy door
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!      

வியாழன், 19 நவம்பர், 2020

34. என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.

நான் என் இறந்தகாலத்தை எரித்து சாம்பலாக்கினேன்; அரும்பும் விதியினின்று முளைக்கும் வருமுன்னர் உரைக்கும் விதைகளை ஒதுக்கித்தள்ளினேன். இறந்தகால, எதிர்கால பயங்களெனும் சிதறிக்கிடந்த சாம்பல்களுக்கு இடையே நான் சிரமப்பட்டு அவற்றைக் கடந்து சென்றேன்.

நான் என்றும் இருக்கும் நிகழ்காலம். நான் என் இச்சா சக்தியின் கூர்மையினால், அறியாமை வலைக்கூடுகளை நார்நாராக கிழித்து எரிந்துவிட்டேன். 

இப்பொழுது, நான் உன் நிரந்தரத்தின் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, கணக்கிடமுடியாத காலப்பாதையின் வழியே நான் மிதந்து செல்கிறேன். இயற்கை ஈந்த என் இறக்கைகளின் அழகினை  எல்லாப்பக்கங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப் படுத்துகிறேன். சூரியர்கள், விண்மீன் துகள்கள் என் இறகுகளில் விரவிக் கிடக்கின்றன. பார், என் அழகை! உன்னை ஏமாற்றிக் கட்டும் அனைத்து பட்டுநூல் பின்னல்களையும் அறுத்து ஏறி! நான் என் அகத்துக்குள்ளே பறந்து செல்வதைப் போல் நீயும் அதனைப் பின்பற்று!   

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
34 Make me Thy Butterfly of Eternity
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!     

புதன், 18 நவம்பர், 2020

68. எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று.

நாங்கள் அமைதியான கடலில் சுகமாய் நீந்திக் கொண்டிருந்தோம்; பின்பு புகழ், நட்பு, பிரபலமெனும் தூண்டில்-புழுக்கள் எங்களைக் கவர்ந்தன. எங்களில் சில அத்தூண்டில் புழுக்களைத் தொட்டுப் பதம் பார்த்தன; வேறுசில அவற்றைக் கண்டவுடன் ஓடிப் பறந்தன.

அய்யகோ, ஆனால் சில உலகக்கவர்ச்சி தூண்டில்-புழுக்களை, மயக்கும் புலனின்ப வலை-மாகுக்களை (sinker) விழுங்கிவிட்டன; மாட்டிக்கொண்ட அவைகள் மிகுதியால் தெவிட்டும் கரைக்கு இழுத்துச்  செல்லப்பட்டன. 

வலியின் துக்கம் தாங்கமுடியாமல் அவை துடித்து, உதாசீனத்தின் இறுக்கத்தால் நெருக்கப்பட்டு இறுதியில் மூச்சுமுட்டி மடிந்தன.

ஏ காலமெனும் தெய்வ ஆசிரியனே, எங்களை திளைத்து மயக்கும் புலனனுபவ தூண்டில்களை நாங்கள் தொடமாலிருக்க எங்களைப் பழக்கு. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original:
68 Save us from the bait of Modern Comforts
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda

---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!