வெள்ளி, 23 நவம்பர், 2007

மருட் குப்பையை அகற்றுதல்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

REMOVING THE DEBRIS OF DELUSION
By Paramahansa Yogananda

என் மனோராஜ்யம் அடர்ந்த மருளினால்
கல்மஷம் அடைந்துள்ளது. என் ஆத்ம கவனக்
குறைவுள்ள நகரங்களில் மனமாசு பன்னெடுங்
காலமாய் குப்பைமேடாகக் குவிந்துள்ளது.
அவைகளை என் சுயக்கட்டுப்பாட்டு முயற்சியான
தொடர்மழையின் மூலம் நான் அகற்றுவேனாக.

குறுகிய மனப்பான்மை, இன மதங்களினால்
வேறுபடுத்தும் தப்பெண்ணம் போன்ற உருமாற்றும்
சேரிகளை ஊழிவெள்ளம் அடித்துச் செல்லட்டும்.

இறைவா! மண்ணில் உழன்று களைத்த என்
எண்ணக் குழந்தைகள் உன் தூய்மையான
ஒழுக்கப் புனலில் நீராடிப் புனிதமடையட்டும்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

---
ஆத்ம கவனக் குறைவுள்ள நகரங்கள் - the cities of spiritual carelessness
கல்மஷம் அடைதல் - begrimed
மருள், மனமாசு - delusion
குப்பை - debris
தப்பெண்ணம் - prejudice

கருத்துகள் இல்லை: