திங்கள், 13 டிசம்பர், 2010

வீட்டை நோக்கிச் செல்லும் என் கடைசிப் பயணம்

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
I am Home-ward bound at last

காலத்தின் பாதையில் நான் பல முறை பிழைக் குழிகளுக்குள் கவனமின்றி தவறி விழுந்துள்ளேன். ஆனால், என்னரசே, ஒவ்வொரு முறையும் உன் கட்புலனாகா கைகளால் என்னைத் தூக்கிவிட்டுக் காப்பாற்றியுள்ளாய்.

எனக்கும் உனக்கும் நடுவே நான், அதிருப்தியால் என் குடிசைக் கதவுகளை மூடி, பழக்கம் எனும் முள் வேலி கட்டி, உதாசீனம் எனும் கற்சுவர் எழுப்பி, மடி எனும் மலைகள் இடைப்பட, அவநம்பிக்கை எனும் கடல் விரிய, தடைகளாலான ஒரு மனோலோகத்தை நெடுங்காலமாக சிருஷ்டித்து வந்துள்ளேன்.

கடவுளே! என்னெஞ்சம் இப்பொழுது தெய்வீக உறுதியினால் நிரம்பியுள்ளது. இனி தேவர்கள் இகலோக சுகத்தை கோடானுகோடி வருடங்களுக்குக் கட்டின்றி அனுபவிக்க வரமளிக்க உறுதி மொழிந்தாலும் சரி, ஆத்ம சாக்ஷாத்காரம் (Self-realization) இன்றி அவற்றின் கவர்ச்சி உன்னை நாடும் வழியிலிருந்து விலகும் வண்ணம் என்னைக் கவர்ந்து இழுக்காது.

தடைகளே, ஜாக்கிரதை! என் வழியை விட்டு விலகி ஓடுங்கள். நான் என் வீடு நோக்கிச் செல்கிறேன்.

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

கருத்துகள் இல்லை: