வெள்ளி, 5 ஜூன், 2020

213. பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள் எரியட்டும்

தெய்வீக அன்னையே !, நம் சோதனைக்காலங்களின் தாக்கங்கள் அனைத்தும் உன் அன்புக்காக மட்டுமே அழட்டும். நாங்கள் சுமக்கும்  சோதனைகள் தரும் அழுகை,  உன்னை நோக்கிய, நிற்காத  அழைப்பாக இருக்குமாறு மாற்று.

தெய்வீக அன்னையே!, எங்கள்  வலியின் ஓலத்திற்கு, உன் ஆறுதலுட்டும் கீதத்தை இசைக்கக் கற்பி. எங்கள்  கர்வத்தை உன் தூய்மையாக்கும் ஜுவாலைகளைக் கொண்டுள்ள அடுப்பில் உருக்கி, அதனை பணிவு எனும்  ஆனிப்பொன்னாக உருமாற்று.

தெய்வீக அன்னையே, அறியாமை எனும்  குறும்புச் சிறுவர்கள் கும்மாளம் போடும் எங்கள் சுயநலம் எனும் குக்கிராமத்தை நொறுக்கி, உன் சர்வவியாபகம் எனும்  கோவிலை, பக்தி, மரியாதை, ஆன்மீக அன்பு ஆகியவைகளை ஆதரிக்கும்  பக்தர்கள் உனக்குச் சரணாலயம் எழுப்பி இதயராக கீதம் பாடுவதற்காகக் கட்டுவாயாக.

அந்தப் பொற்கோவிலில், நிற்காத இதயகானத்தால் என்றும் மணக்கும் சுகந்த தூபத்தை அவர்கள் ஏற்றுவார்கள்.

எங்கள் பக்தியார்வத்தில் தினமும் மலரும், என்றும் மணக்கும் மலர்களை உன் பாதத்தில் சமர்ப்பிப்போம்.

எங்கள் ஒருங்கிணைந்த இதயபீடத்தில் உன் சர்வவியாபகத்தை  நிலைநாட்டு.

எங்கள் ஆத்மாவின் அன்புக்குரிய ஒரே வஸ்துவாக நீ இரு.

எங்கள் லௌகீகத்தை, உன் அநந்த ஜ்வாலையால் சுட்டெரி
பக்தித்தணலில் நம் அலட்சியப்போக்குகள், நிதானமிழப்பு, அறியாமை அகியவற்றை எரி.

எங்கள் மனதை உன் நினைவுகளால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் இதயத்தை உன் அன்பால் ஜ்வலிக்கச் செய்! எங்கள் ஆன்மாவை உன்  ஆநந்தத்தால் ஜ்வலிக்கச் செய்!

Translation: V.R. Ganesh Chander

Original:
213 With The Torch of our Devotion, blaze our dark indifference
Whispers from Eternity 1929

கருத்துகள் இல்லை: