வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Thou dost Ever Behold Me - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou dost Ever Behold Me

கண்ணிமைக்காமல் காக்கும் ஸர்வ ரக்ஷகனே,

உன் விழிகள் காலம் தவறாத பகலவனாகவும், வளர்ந்து தேயும் நிலவாகவும் என்னைத் தொடர்ந்து நோக்குகின்றன.

பரந்து விரிந்த உன் பார்வை விதம்விதமான துவாரங்கள் வழியும், இரவில் மின்னும் விண்மீன்கள் மூலமும், எங்கு சென்றாலும் என்னை விடாமல் பார்த்துக் கொள்கின்றது.

அவ்வப்போது வீசும் தென்றலாய் நீ என்னைத் தழுவிப் பேணுகிறாய்.

உன் மேலும், உன் குழந்தைகள் மேலும் நான் கொண்ட பிரேம எண்ணங்களில், நீ உன் அருள்மழையை நிசப்தமாய்ப் பொழிந்து என்னைப் போஷிக்கின்றாய். 

 #PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

கருத்துகள் இல்லை: