வெள்ளி, 11 ஜூன், 2021

178. உன் இசையை என் உடைந்த குழலின்மூலம் ஊது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் இசையை என் உடைந்த குழலின்மூலம் ஊது.

[பிரணவ] வேணுகானம் இசைப்போனே,  உன் இசையை உடைந்த குழல்களெனும் மதங்கள் எல்லாவற்றின் வழியேயும் ஊதி, உன் ஒரே உண்மைக்கானத்தை வெளிக்கொணர். அந்த தெய்வீக கானத்தை உன் பேருணர்வின் வளமை பொதிந்த பலவித பொன்மய ஆடைகளினால் போர்த்தி அலங்கரி.  

வேணுகானம் இசைப்போனே, அகன்ற, குறுகியவழிகளிலெல்லாம் வெளிப்படு பாவனைகளான உன்னுடன் ஒத்திசைக்க நாடும் முழுமையடையாத இதயகானங்கள் எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி, அவற்றை அன்பிசைக்கும் வாழ்க்கைக் குழலின் மூலம் முழுமையான ஆனந்தத்தை நோக்கி செலுத்து.    

அந்த பரிச்சயமுள்ள உன் சன்னமான-மிருதுவான ஸ்வரங்களுக்காக, நான் அனுதினமும் அமைதியுடன்-லயித்த என் மன-வானொலிப் பெட்டியில் தொடர்ந்து செவிமடுத்தேன். நான் வெகுதொலைவிலிருந்து உன்னுடன் ஒத்திசைக்க முயன்றேன். முதலில், பல ஆரவார சத்தங்கள் குறுக்கிட்டு என் அமைதியைக் குலைத்தன. ஆனால், என் ஒருமுகப்பாட்டில் ஜாக்கிரதையாக சில நுண்ணிய மாற்றங்களை செய்தபின், நீ விண்வெளி இறக்கைகளில் பறந்து வந்து சேர்ந்தாய். உடனே, பூமியின் அனைத்து நல்லவைகளுடனும், எல்லா இதயங்களின் புனிதங்களுடனும் சேர்ந்து நீ பாடும் அமைதி கானத்தை நான் கேட்டேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
178 Blow Thy music through my shattered reed.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: