வியாழன், 9 செப்டம்பர், 2021

23. அறியாமை மூடியினைத் தகர்த்திட உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அறியாமை மூடியினைத் தகர்த்திட உரிமையுடன்-வேண்டுதல்.

என் உணர்வுதளம் ஊனுடம்பெனும் சிறுசிமிழிக்குள் அறியாமை மூடியினால் மூடப்பட்டு அடைந்து கிடப்பதை இனி விட்டொழியட்டும். பிரபஞ்சப் பேருணர்வுக் கடலில் நான் பகலிரவாய், நாள்தோறும், வருடங்கள்தோறும், ஜென்மங்கள்தோறும் வெகு அருகாமையிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருப்பினும், கடலுடன் தொடர்புறவு கொள்ள முடியவில்லை. பிரபஞ்ச நாதத்தின் பொங்கும் அதிர்வலைகளாலும், உன் புனித நாமத்தின் பேரலைகளாலும், மிக அண்மையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தும், என்னை உன்னிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டிருந்த, அறியாமை மூடியினைத் தகர்த்து எறிந்தேன். இப்போது என் உடம்பினுள்ளே உள்ள உணர்வுதளம், வெளியே சர்வ-வியாபக பேருணர்வுடன் சந்திக்கும். இனி உன்னை அறியாமல், உணராமல், நான் உன் சிந்தனையின்றி உன்னுள் இயங்கமாட்டேன். என் உள்ளேயிருக்கும் உன் பிரதிபிம்ப சைதன்யம் , எங்கும் பரவியிருக்கும் உன் கூடஸ்த-சைதன்ய பிரதிபிம்பத்துடன் ஒருங்கிணையும். என்னுள்ளேயுள்ள "நான்" எனும் அகந்தையை விட்டொழிவதனால், நானே நீ, நீயே சிறு அகந்தைகள் எல்லாமுமாக ஆகியுள்ளாய் என்பதனை நான் அறிகின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
23 Prayer-Demand for removing the cork of ignorance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: