திங்கள், 29 ஆகஸ்ட், 2016

Thou art Plainly Present - Sri Paramhansa Yogananda

ஓம்

Thou art Plainly Present

தெய்வமே என் தந்தையே,

நான் கடல்தீரத்திலோ, ஓடையிலோ அலைகளில் துள்ளிக் குதித்து நீராடும் போது, நான் உன்னுடன் சேர்ந்து ஆடுகிறேன்.

பிரகாசமான வர்ணங்களினால் நீ தீட்டிய மேகச் சித்திரங்களை நாள்தவறாமல் நான் வானில் காண்கிறேன்.

பசும்புல் கொண்டு நீ கட்டாந்தரையைப் போர்த்தும் நேர்த்தியைக் கண்டு நான் ரசிக்கிறேன்.

நீயே ஆதவனின் ஒளியில் உள்ள இதமான கதகதப்பு.

இப்படி, எங்கெங்கு காணினும் எல்லாவற்றிலும் நீ யதார்த்தமாய் விளங்கும் வியன்மிகு காட்சியைக் கண்டு, என் சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன்.

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda


கருத்துகள் இல்லை: