வெள்ளி, 23 ஏப்ரல், 2021

152. புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு.

தெய்வகுருவே, என் ஆன்மாவின் நிரந்தர இன்பத்திற்கும், கடந்துபோகும் புலனின்பங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிய என்னைப் பழக்கு. என் கண்களை நன்கு திறந்திருக்கமாறு செய்; அதனால், புலன்கள்  களவாடிய ராஜவேஷம் பூண்டு, கானல்நீர் போன்று புனிதமான இன்பத்தோற்றத்தை நிஜம்போலப் பொய்யாகக்காட்டி, என் வாழ்க்கை மாளிகைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து என்னை ஏமாற்றத்துணிவதைத் தடுக்கமுடியும்.  

என் விவேகமற்ற, தடுமாறும் புலன்களை ஒழுக்கப்படுத்து, அதன்மூலம் அவைகளினால் ஏற்படும் சுகங்களை ஆன்மீகமயமாக்கி, பளபளவென மின்னும் புலன்படும் தோற்ற ஜாலத்தைக் கடந்து, எளிமையின் தூய வெண்ணிற அங்கிக்குப்பின்னே மறைந்திருக்கும் தெய்வீக சுகத்தை அவை  எப்போதும் நாடப் பழகட்டும்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
152 Teach me not to be deceived by the senses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: