ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

79. எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி.

எங்கள் அனைவருக்கும் தந்தையான ஒரே இறைவனே, எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி. உன் கருணையால் எனக்குத் தாற்காலிமாக இருப்பிடமாக அமைந்துள்ள நாட்டை எப்படி  நான் நேசிக்கின்றோனோ, அப்படி என் எல்லா சகோதர-நாடுகளையும் நேசிக்க எனக்குக் கற்பி. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை நேசிக்காதவர்களையும்  நான் நேசிக்க எனக்குக் கற்பி. தவறிழைக்கும் என் உடன்பிறந்தவர்களிலும் உன் சாந்நித்யத்தைப் பார்க்க எனக்குக் கற்பி. அறியாமை-தீண்டிய என் உடன்பிறந்தவர்களை, நான் எப்படி முனைப்புடன் என்னைக் குணப்படுத்த முயற்சிப்பேனோ அப்படி அவர்களையும் குணப்படுத்த எனக்குக் கற்பி.

தெய்வத்தாயே, முரட்டுத்தனத்தினின்று மெலிந்தோரைக் காக்கும் பொருட்டு, தவறிழைக்கும் உடன்பிறந்தவர்களைத் தவிர்க்கமுடியாத பட்சத்தில் தனிமைப்படுத்தும்போதோ தண்டிக்கும்போதோ, நான் களிப்புறாமல் இருக்க எனக்குக் கற்பி. வழிதவறியவர்களை உன் கருணையினாலும், என் முன்னுதாரணமான நடத்தையினாலும் குணப்படுத்த எனக்குக் கற்பி.  

மரணமே சம்பவிக்குமாறு என்னை அடித்துக் காயப்படுத்துபவனும் உன் பிரதிபிம்பத்தில் உள்ள என் சகோதரனே என்றுணர எனக்குக் கற்பி; ஏனெனில் அவன் அறியாமை தற்காலிமாகமானதே. என்னுள் பழிக்குப்பழி வாங்கும் வஞ்சகுணத்தை அறவே ஒழிப்பாயாக. என் குற்றவாளிச் சகோதரர்களைத்  தண்டனையின்றி குணப்படுத்த எனக்குக் கற்பி. அவர்களின் அறியாமையை என் தவறான வழிகளினாலோ, பழிவாங்கும் எண்ணத்தினாலோ அதிகப்படுத்தாமல் இருக்க எனக்குக் கற்பி. மாறாக, என் மன்னிக்கும் குணத்தினாலும், ஒழுக்க நெறியினாலும், நெஞ்சுறுதியினாலும், ஞானத்தினாலும், மேன்மையான முன்னுதாரணத்தினாலும், பிரார்த்தனையினாலும் மற்றும் உன் அன்பினாலும் அவர்களை மேம்படுத்த எனக்குக் கற்பி.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
79 Teach me to feel that all men are my brothers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: