செவ்வாய், 20 ஏப்ரல், 2021

87. தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி.

இறைத்தந்தையே, ஆனந்தத்தினில் இருந்து நான் தோன்றியுள்ளேன்; ஆனந்தத்திற்காக நான் வாழ்கின்றேன்; அந்த ஆனந்தத்தில் நீ என்னை உருக்கி விடு! நீ புனிதமான இடையறாத ஆனந்தம்; நீ தான் நான் விரும்பித் தேடும் அந்த ஆனந்தம்; நீ என்றும் நிலைத்திருக்கும் ஆன்ம ஆனந்தம். வழிதவறிய புலனின்பங்களினால் அன்றி, தியானத்தினிலும், நற்செயல்களிலும் உதிக்கும் ஆனந்தத்தினால் மட்டுமே உன்னைத் துதிக்க எனக்குக் கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
87 Worship of God as sacred Joy found in meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: