வியாழன், 22 ஜூலை, 2021

39. கடவுட்-போதையால் தோய்ந்த கண்களில் ஊறும் மதுபானத்தைச் செல்வந்தர்கள் வீட்டில் பரிமாற விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுட்-போதையால் தோய்ந்த கண்களில் ஊறும் மதுபானத்தைச் செல்வந்தர்கள் வீட்டில் பரிமாற விரும்புகின்றேன்.

உன் கோயில்களில், பலர் வழிபட வருகையில், நான் அவர்களின் கண்களிலிருந்து கடவுட்-போதையை சேகரிப்பேன். அவற்றைச் சேர்ந்து கலந்து பக்தி-மதுபானமாய் ஆக்குவேன். அதை என் தாகத்தால் தவிக்கும் எண்ணங்களுக்கு ஊற்றிக்கொடுப்பேன்; அவை அதனை மென்மேலும் குடித்து, அவைகளுடைய மேலோங்கி நிற்கும் காயங்களையும் கவலைகளையும் மறந்துபோகும்.

அருட்செல்வம் குன்றிய பணக்காரச் செல்வந்தர்கள் வீட்டில், அந்த மாய மதுபானத்தை என் நல்லெண்ணத்துடனான நேர்மை ஜாடிகளினால் ஊற்றிப் பரிமாற விரும்புகின்றேன்.

எவரெல்லாம் அந்த மதுபானத்தைப் பருகுகின்றனரோ, அவர்களின் போதை மிகுந்து முற்றி, தங்கள் சுயரூப அறியாமையின் துன்பத்தை அன்றிலிருந்து அடியோடு மறக்கவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva


Original: 
39 May I serve the cocktail of God-Intoxicated Eyes in the home of the rich.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: