புதன், 25 ஆகஸ்ட், 2021

13. சாயங்காலப் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சாயங்காலப் பிரார்த்தனை.

நாட்பொழுது முடிந்தது. நாட்பொழுதில் சூரியவொளியினால் நான் புத்துணர்வும், சுத்திகரிப்பும் அடைந்தபின், மங்கி மினுமினுக்கும் நட்சத்திரங்களுடன் மங்கலாக அலங்கரிக்கப்பட்ட சாயங்காலப் படித்துறைகளின் வழியே உன் அமைதிக்கோயிலுக்குள் நுழைந்து உன்னை வழிபடச் செல்கின்றேன். அங்கு உன் பேருணர்வின் அரும்பிவரும் சாந்தத்தை நான் வழிபடுகின்றேன். என்ன சொல்லி நான் பிரார்த்தனைகளை உனக்கு சமர்ப்பிப்பது, ஏனெனில் உன்னைத் தொழுவதற்கு என்னிடம் வார்த்தைகளேயில்லை? நான் என் பக்தியின் சிறு சுடரை என் ஆன்மபீடத்தில் ஏற்றுவேன். ஆனால், அந்த ஒளி என் அறியாமையின் இருளால் சூழப்பட்டு, மங்கலான வெளிச்சம் கொண்ட என் இருண்ட கோயிலுக்கு போதிய வெளிச்சம் தருமா? வா! நான் உன்னை கெஞ்சியழைக்கின்றேன்; உனக்காக நான் ஏங்குகின்றேன், வா! 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
13 Prayer at Eventide.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: