செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

O Virtue! Thou art Infinitely More Charming Than Vice – Sri Paramhansa Yogananda

பரப்பிரம்மமே, நாங்கள் அறவொழுக்கத்தைக் கண்டு பயந்து ஒதுங்காமல் அன்புடன் அணுகக் கற்றுக் கொடு.

உன் ஒழுக்கநெறிக்கு அடிபணிந்தால் நாம் பெறுவதோ உன் அருட்கொடையான மங்காப் புகழ் மகுடம்!
***

நீ அறனெறிக் கட்டளைகளை விதித்தது எங்கள் சுகநலத்தைக் காப்பதிற்கே. 

மாறாக, தீவொழுக்கத்தின் விளைவு எப்படியும் துன்பத்தில் தான் முடியும் என அறிந்து நாங்கள் அதனிடத்தினின்று விலகச் செய்.

அறத்திற்கு தீநெறியைக் காட்டிலும் அளவிடற்கரிய காந்தசக்தி உண்டு என்பதைக் கண்கூடாய் உணரச் செய்.    
***

கெட்ட பழக்கம் முதலில் நன்கு இனிக்கும், ஆனால் படிப்படியாக விஷமாய் மாறிக் கொல்லும். நன்னெறியோ முதலில் சற்று கசந்தாலும், முடிவில் அமிர்தமாய் இனிக்கும். இந்த சூக்ஷும விஷயத்தைப் புரிந்து செயல்பட எங்களுக்கு விவேகத்தைக் கொடு.  

#PHD

கருத்துகள் இல்லை: