வியாழன், 3 டிசம்பர், 2020

185. எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.

ஓ வாழ்வின் ரகசியமான மாண்புமிகு நீதிபதியே, உன்னை நான் என் ஆன்ம-நிஸ்சல நிலையில் "பாபம் எனப்படுவது யாது?" என வினவினேன்.  

உன் சன்னமான நிசப்தமொழி பெருகி என் எண்ண அலைகளாய் விளங்கியது. "பாபம் என்பது எதிரி-அரசனான அறியாமை" என்று உன் பதிலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். அதுவே எல்லாவிதமான தீயவைகளும் ஏற்பட மூலகாரணம். அது நோயெனும்  மரத்திற்கு ஆணிவேர், அதுவே அனைத்து செயல் திறனின்மைக்கும், ஆன்ம-குருட்டுத்தனத்திற்கும் முதற்காரணம். 

அறியாமை அரசன், அவனுடைய படைகளான உடல்நோவை உண்டாக்கும் பாக்டீரியக் கிருமிகள், மனத்தளர்ச்சியைத் தரும் எண்ணக் கோளாறுகள், பேராசை, தவறான குறிக்கோள், கடவுளின் மேல் கவனம் செலுத்தாமை போன்றவைகளுடன் கூடி, போஷாக்கு செய்யும் ஆன்மீகப்பயிர் விளையும் நிலங்களில் அப்பயிர்களை துவம்சம் செய்வதற்கென்றே அணிவகுத்துச் செல்கின்றன.

பல்விதப் பயிர்கள் உனது அனுக்கிரகத்தால் போகமடைந்து அறுவடையாகும் சமயத்தில், அந்தத் தவறின் கொடூரமான அணிநடை அறுவடையை மிதித்து அழித்தது. நான் தாளாத் துயரத்தில் அழுகத் தொடங்கும் போது, உனது குரலோசை, "செம்மையுடன் பிரகாசிக்கும் உனது நாட்களிலும், கருமையாய் இருண்ட நாட்களிலும் எனது சூரியக் கரங்கள் உனக்கு சமமாகப் பாதுகாப்பை அளிக்கும். அதனால், நீ நம்பிக்கையுறுதி கொள், புன்னகை புரி; சந்தோஷம் இன்மையே எனக்கு எதிராகச் செய்யும் எல்லா பாபங்களிலும் கொடிய பாபம். உனது முகத்தில் என்றும் புன்னகை பூத்துக் குலுங்கட்டும். உனது கள்ளமற்ற புன்னகையின் வாயிலாய் என் ஒளி உனக்கு வந்து உதவும். நீ மகிழ்வாய்  இருத்தலே, எனக்கு நீ செய்யும் திருப்திதரும் தொண்டு!" எனச் சொல்ல நான் கேட்டேன்.  
  
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
185 Driving the Rebel-King, Ignorance
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: