திங்கள், 3 மே, 2021

104. எல்லோரும் என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்கட்டும்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லோரும் என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்கட்டும்.

உன் அன்பின் தென்றல்காற்று என்னுள் கலந்ததனால், இறைத்தந்தையே, உன் வருகையை எதிர்நோக்கி என் வாழ்க்கை மரமானது மெதுவாக தனது இலைகளை உன்னை வரவேற்பதுபோல் அசைக்கின்றது. என் ஆன்ம இலைகள் தற்சமயம் விழித்துக் கொள்கின்றன. அவைகள் ஒன்றோடொன்று உரசும் சப்தம், காற்றில் மிதந்துவந்து, களைத்து நைந்துபோனவர்களை உன்னிடமிருந்து பெற்ற என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்குமாறு அழைக்கின்றது. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
104 Let all rest in the shade of my peace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: