புதன், 17 அக்டோபர், 2007

பழக்கத்தினாலன்றி சுதந்திரவுரிமை கொண்டு செயல்பட

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

MAY I ACT FROM FREE CHOICE, NOT HABIT
By Paramahansa Yogananda

எந்தையே! நில்லாத புலனின்பத்தை விடுத்து ஆத்மாவின்
நிலையான பேரின்பத்தை நாட கற்றுக் கொடு.

தன்னிச்சையை உரப்படுத்து. அதன் மூலம் தீய
பழக்கத்தை ஒழித்து, தவத்தின் சிறந்த பெரியாரின் துணை
கொண்டு, த்யானத்தினால் என்னைச் சீர்படுத்துவேன்.

அற வழியில் ஆனந்தமாய்ச் செல்ல எனக்கு ஞானத்தை
அருள்வாயாக. தீயன நுண்ணியதாயினும் அறிவறிந்து,
பணிவான நற்பாதையில் என்னை வழிநடத்த என் ஆத்ம
குணமான பகுத்தறியும் ஆற்றலைச் செம்மைப்படுத்துவாயாக.

முற்றிய பழக்கத்தினாலன்றி கடவுளருளிய சுதந்திரவுரிமை
கொண்டு என்னுடைய வாழ்க்கையை நடத்திச் செல்வேன்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
தன்னிச்சை - (self) will

கருத்துகள் இல்லை: