சனி, 20 அக்டோபர், 2007

உன் பிரபஞ்சத் திரையை நீக்கு

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

REMOVE THOU THE VEILS OF CREATION
By Paramahansa Yogananda

இறைவா! பிரபஞ்சப்பொருட்கள் உன்னை என்னிடமிருந்து
மறைக்கின்றன. இன்னும் எத்தனை காலம் தான் இந்த அழகிய
அல்லி, ரோஜா மலர்கள் பின்னும் தங்க வண்ண முகில், நட்சத்திரம்
பொதிந்த அரவமற்ற வானம் பின்னும் ஒளிந்திருப்பாய்? ஓர் ஆறுதல்!
இவை உன்னை மறைத்த போதிலும், உன்னிருப்பை குறிப்பால்
உணர்த்துவதால் என் மனத்தைக் கவர்கிறது. ஆயினும், உன்
பிரபஞ்சத் திரை நீக்கப்பெற்று, உன்னை உண்மையில்
தன்னந்தனியாக காண ஏங்குகிறேன்.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

கருத்துகள் இல்லை: