வியாழன், 25 அக்டோபர், 2007

உனது மாயாசக்தி

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

THY MAGIC POWER
By Paramahansa Yogananda

என் கண்கள் நீ பார்ப்பன பார்க்கட்டும்.
என் காதுகள் அலையலையாக வரும் படைப்பில்
ஒலிக்கும் உன் குரலோசையைக் கேட்கட்டும்.
என் வாக்கு கசந்து கருகிய நெஞ்சங்களில்
அமிர்த ஊற்றாக வார்த்தைகளைப் பொழியட்டும்.
என் உதடுகள் உன் அருளும் இன்பமும் பொதிந்த
பாட்டுக்களையல்லது மற்றதைப் பாடமலிருக்கட்டும்.

அன்பே! சத்தியத்தின் வேலையை என்மூலம் செயல்படுத்து.
என் கைகள் என்னெல்லா சகோதரர்களுக்காகவும்
முனைப்பாக பணிசெய்யட்டும்.
என் குரல் எப்பொழுதும் உன்னன்பின் விதையை
நாடும் நெஞ்சங்களில் விதைக்கட்டும்.
என் கால்கள் சரியான செயல் பாதையில் ஓயாமல் இயங்கட்டும்.
என்னை இருள் மலிந்த மருட்சியிலிருந்து ஞானஜோதியில் சேர்.
என்னை நில்லாத சிற்றின்பங்களிலிருந்து விடுத்து
உன் ஆராத இன்பத்தை என்னுள்ளே அனுபவிக்கச் செய்.
உன்னருள் என்னன்பாகட்டும்; அதன்மூலம் அனைத்தையும்
எனதென போற்றுவேன்.

அப்பா! என்னிதயத்தில் துடித்துக்கொண்டேயிரு, எல்லா
உயிர்கள் மீதும் கருணை பொங்கட்டும்.
உன் ஞானக்கனலை என்னுள்ளே தூண்டிவிடு, இகபோக
சுகமென்னும் அடர்ந்த காட்டைத் தீக்கிரைக்காக்கட்டும்.
உன் திறம் என்னுக்திக்கு குருவாகட்டும்.
என் எண்ணங்கள் மூலம் எண்ணுக; ஏனெனில்
உனது மாயாசக்தி தான் என் மனதை உன் மனதாகவும்,
என் கைகளை உன் கைகளாகவும்,
என் கால்களை உன் கால்களாகவும்,
என் ஆத்மாவை உன் இருப்பிடமாகவும்,
உன் புனிதசெயல் செய்யும் வண்ணம் அமைத்திருக்கிறது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

கருத்துகள் இல்லை: