செவ்வாய், 30 அக்டோபர், 2007

இறைவா! எங்கள் முதல் கடமை நின்னதே

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

O LORD, OUR FIRST DUTY IS TO THEE
By Paramahansa Yogananda

இறைவா! தன்னந்தனி நின்று அதுதான் என்றறியும்
உன் புண்ணிய கடமையைச் செய்வதைத் தவிர
வேறெந்தவொரு வேலையும் முக்கியமல்ல. ஏனென்றால்,
எந்தவொரு காரியம் செய்யவும் நீ தான் எங்களுக்கு
சக்தி கொடுத்து செயல்புரிய வைக்கின்றாய்.

உன்னை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பேனாக.
ஏனெனில், உன்னருட் கொடையான உலக
வாழ்க்கையும், பேரன்பும் இன்றி நாங்கள் வாழவோ,
அன்பு செலுத்தவோ ஒருக்காலும் இயலாது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

கருத்துகள் இல்லை: