புதன், 27 அக்டோபர், 2021

114. கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, என் பிரார்த்தனைக்கு அடித்தளமாக நீயிருந்தும், ஏன் நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய்? என் உணர்வுகளில் நீ அதிர்ந்தாலும் என் எண்ணங்களின் திரைக்குப் பின்னாலிருந்து உன் சாந்நித்தியம் வெளிப்பட்டாலும், நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய். வா, தந்தையே, வந்து இந்தத் திரையை விலக்கு! வா, எந்தையே, வா! என் பிரார்த்தனைகளின் குரலைக் கேள். நான் உன்னை அறிய விரும்புகின்றேன். நான் உன்னிடம் பேச விரும்புகின்றேன். நான் உன்னிடம் பிரார்த்திக்க விரும்புகின்றேன்; நீ என் பிரார்த்தனைகளைக் கேட்பதையும் நான் அறிய விரும்புகின்றேன். உன்னிடம் என்னை அழைத்துச் செல்லும் பாதையை எனக்கு காண்பி.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
114 Demand for the realization of God's presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: