வெள்ளி, 29 அக்டோபர், 2021

127. வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.

தெய்வத்தாயே, எல்லோரையும் மரணம் மறைவாகப் பின்தொடர்ந்தாலும், தீரர்களானவர்கள் அங்குமிங்குமெனப் பறக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே செல்லும்போதும் புன்னகைப்பார்கள். ஆனால் நான் புன்னகைக்கின்றேன், ஏனென்றால் நிகழும் இந்த வாழ்க்கையலைகளின் மேலே நான் மிதந்தாலும், மரணச் சுழலலையின் அடியில் நான் மூழ்கினாலும், உன் காக்கும், சர்வவியாபக நிரந்தரமான வாழ்க்கையில் நான் - உன் என்றுமழியாக் கரங்களால் அரவணைக்கப்பட்டு - அமைதியாக வீற்றுள்ளேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
127 Whether dead or living, I am held in Thine Immortal Arms.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: