வியாழன், 30 டிசம்பர், 2021

227. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி.

இறைத்தந்தையே, நான் கேட்பதை சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மையை எனக்குக்கற்பி. நான் கற்கும் அனைத்து நல்விஷயங்களையும் என் அன்றாட வாழ்க்கையில் நான் பயில்வதற்கு உதவு. உன்னை இயற்கையின் செயல்களில் காணுமாற்றை எனக்குக்கற்பி. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி. உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் - ஓம்! ஆமென்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
227 Teach me to feel Thee as silence when I close my eyes.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 29 டிசம்பர், 2021

226. பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.

தெய்வத்தாயே, நான் பிறரை நேசிக்கவும், அவர்களுக்கு நான் சேவையாற்றவும் எனக்குக்கற்பி. பிறர் என்னிடம் உண்மையாக இருப்பதை விரும்புவதைப் போல, நானும் பிறரிடம் வாக்குத் தவறாமல் உண்மையாக இருக்குமாறு எனக்குக்கற்பி. பிறர் என்னை நேசிப்பதை நான் விரும்புவதைப் போல, நானும் பிறரை நேசிக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறரை நான் மகிழ்வித்து, அவர்களைப் புன்னகைப் பூக்க வைக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
226 Teach me to find happiness in the joy of others.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 28 டிசம்பர், 2021

225. நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

பிரியமான இறைத்தந்தையே, எனக்குத் தாகமாக இருக்கும்போது தண்ணீரைப்  பருகுகிறேன், ஆனால் நீதான் அதன்மூலம் உயிரூட்டும் சக்தியை எனக்குத் தருகின்றாய். குளிக்கும்போது நான் புத்துணர்வு பெறுகின்றேன், நீதான் உன் தூய்மையாக்கும், புத்துணர்வூட்டும் சக்தியை நீருக்கு அளித்துள்ளாய் என்பதை நான் உணர்கின்றேன். என் முகத்தில் சூரியவொளி விழும்போது, உனது போஷிக்கும் கதகதப்பினால் என்னைத் தொடுவதாக உணர்கின்றேன். நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், மத்தியானத்திலும், சந்தியாகால ஒளியிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
225 I bow to Thee in the sunshine, breeze, dawn, and hearts of loving friends.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

224. நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

பிரியமான இறைத்தந்தையே, என்னை இருளிலிருந்து விடுவிக்க நிலவொளி வருகின்றது. எனக்கு கதிரொளி நல்க பகலவன் வருகின்றது. எனக்கு உணவை அளிக்க தட்பவெப்ப காலங்கள் (ருதுக்கள்) வருகின்றன. ஆனால் நீ தான் இவைகளின் இயக்கக் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
224 Thou art the cause of everything - I bow to Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 25 டிசம்பர், 2021

223. என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால்.

பிரியமான இறைத்தந்தையே, என் பெற்றோர் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். என் நண்பர்கள் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். நான் என் நாட்டை நேசிக்கின்றேன், ஏனெனில் நீ அதனை நேசிப்பதனால். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
223 My parents and friend love me, dear Father, because Thou do love me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

222. நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

பிரியமான இறைத்தந்தையே, நான் அலைகள்மீது விளையாடும்போது, நான் உன்னுடன் விளையாடுகின்றேன். வானத்தில் நீ அழகிய வர்ணக் கோலமிடுவதை நான் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றேன். நீ பசும்புல்லினால் வெற்றுநிலத்தைப் போர்த்துவதை நான் காண்கின்றேன். நீ சூரியவொளியிலே இருக்கின்றாய். கடவுளே, நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய்! உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
222 Thou art so plainly present everywhere, I bow to Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 24 டிசம்பர், 2021

221. உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும்.

பிரியமான இறைத்தந்தையே, நான் உறங்கும்போது, சாந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் விழித்திருக்கும்போது, ஆனந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் என் நண்பர்களை நேசிக்கும்போது, அன்பு உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் ஓடிவிளையாடும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து ஓடி வரவேண்டும். நான் சிந்திக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து சிந்திக்கவேண்டும். நான் இச்சாசக்தியை பிரயோகிக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து இச்சாசக்தியை பிரயோகிக்கவேண்டும். நீ என் அருகிலேயே இருப்பதால், நல்வழியில் நான் சிந்திக்கவும், விளையாடவும், ஒழுகவும், இச்சாசக்தியை பிரயோகிக்கவும் எனக்குக்கற்பி. நீ என் நலத்தை-விரும்புபவர்களில் மேன்மையானவராதலால், நான் உன் வழிகாட்டுதலின்படி நடக்க விரும்புகின்றேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
221 Come to me as Peace in sleep and as Joy when I am awake.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

220. எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி.

இறைத்தந்தையே, நான் எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி. மற்றவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமலிருக்க எனக்குக்கற்பி. மற்றவர்களை புன்னகையாலும் துன்பப்படுத்தாமலிருக்க எனக்குக்கற்பி. எப்படி நான் சந்தோஷமாக இருக்க விரும்புவேனோ, அப்படியே மற்றவர்களையும் நான் சந்தோஷப்படுத்துமாறு எனக்கு அருள்புரி.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
220 Teach me to give smiles to all.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 23 டிசம்பர், 2021

219. என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக.

தெய்வத்தாயே, என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா பால்ய நண்பர்களையும் நான் நேசிக்குமாறு செய். என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதனால், எல்லா இதயங்களிலும் உன் அன்பையே காண்பேனாக. என்னை நேசிப்பவர்களை  நான் நேசிக்க எனக்குக்கற்பி; அதை விட, என்னை நேசிக்காதவர்களுக்காக நான் நெஞ்சுருகிப் பிரார்த்திக்குமாறு எனக்குக்கற்பி. அவர்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள் என்ற காரணத்தினால் நான் அவர்களை நேசிப்பதில் மகிழ்ச்சியடைவேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
219 By loving all friends may I find Thy love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 22 டிசம்பர், 2021

218A. என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.

கடவுளே, என் தாயும், என் தந்தையும் என்னை நேசிப்பதனால், அன்பே நீ என்பதை நான் அறிவேன்: நீயே ஆதிமூலமான என் தந்தையும் தாயும். நீ என் நண்பர்கள் இதயத்தில் இருப்பதாலேயே தான் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்: நீயே என் தலைசிறந்த நண்பன். நீயே என் குரு; நீ எப்படி என்னை நேசிக்கின்றாயோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
218A Thou art Love because my mother loves me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 21 டிசம்பர், 2021

217. சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது.

தியானத்தின் கதவுகள் வழியாக, சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது. அது வெளியே பறந்து சென்று, தனது இறக்கைகளை எல்லையற்ற ஆகாசத்தில் விரித்தது. துன்பத்தால்-வாட்டப்பட்ட எல்லா உயிர்களின் மீதும் அதன் ஆனந்த இறக்கைகளின் சாந்த நிழலை வீசியது. 

பின், அந்த சொர்க்கலோகப் பறவை திரும்ப தனது சிறு கூண்டெனும் பழைய பழக்கங்களின் எண்ணங்களை நினைவுகூர்ந்தது; உடனே, அது தனது இறக்கைகளை மடக்கிக் கொண்டு, லோகாயதத் தன்மைகொண்ட அந்த இரும்புக்கம்பிகளுக்குப் பின்னே சென்று முடங்கியது.

நிரந்தரத்தின் பறவையே, சித்திரவதைப்படுத்தும் கனவுகளாலான உன் சிறு கூண்டை உடைத்துத் தள்ளிவிட்டு, எல்லாவற்றிலும் குடிகொண்டுள்ள உன் சர்வவியாபகக் கூட்டிற்குப் பற. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
217 The imprisoned Bird of Omnipresence was released.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 20 டிசம்பர், 2021

216. பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!

பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்! உன் பாதத்தில் என் இதயத்தை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். உன் பாதத்தில் என் ஆன்மாவை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். சர்வவியாபகமான உன் பாதத்தில் என் அன்பின் மணமான கஸ்தூரி கந்தத்தை முழுவதுமாகச் சமர்ப்பிக்கின்றேன். 

அருமையான அருளாளனே, என் இதயத்தின் இருள்கவ்விய மூலைகளில் உன் ஆனந்த கானத்தை எப்போதும் இசைப்பாயாக.

நான் முழுதுமாக உன்னவனே! நான் என்றென்றும் உன்னவனாகவே இருப்பேன்! என் மறவா நினைவின் பொற்சிமிழுக்குள் உனது காக்கும் அன்பினை நான் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பதால், எல்லா பயங்கரங்களையும் கண்டு நான் எள்ளி நகைப்பேன்.

என் அனைத்து ஆசைகளையும், உலக சுகங்களையும் உன் வேள்வித்தீயில் இட்டு, உன்மேலுள்ள என் பக்திக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பேன். என் கற்பனையின் நிழல்கள் மற்றும் அச்சங்கள் அனைத்தையும், உன் அருட்ஜோதியில் சுட்டெரிப்பேன். உன் அருட்ஜோதியில் நான் எப்போதும் விழித்திருந்து, உன் அரிய, சர்வவியாபக முகத்தை என் உன்னிப்பான கண்களால் யுகாந்தரமாக என்றும் நிரந்தரமாய் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

உன் அன்பு என் பக்தி கோயிலில் எப்போதும் பிரகாசிக்கட்டும், அதன்மூலம் நான் எல்லா இதயங்களிலும் உன் அன்பினை விழிப்புறச் செய்வேனாக.   

கடவுளே! என் ஆன்மாவை உன் கோயிலாக்கிக் கொள்! என் இதயத்தை உன் பீடமாக்கிக் கொள்! என் அன்பினை உன் இல்லமாக்கிக் கொள்!    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
216 A million salutations at Thy petaled feet, O Lotus of Light.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

209. நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.

தெய்வத்தாயே, ரோஜாப்பூவின் பேசும் மணத்தில் உன் குரலைக் கேட்டேன். என் பக்தியின் சன்னமாக முணுமுணுக்கும் பிரார்த்தனைகளில் உன் குரலைக் கேட்டேன். என் ஆரவாரிக்கும் எண்ணங்கள்போடும் இரைச்சல்களின் அடியிலும் உன் குரலைக் கேட்டேன்.  உன் அன்பே தான், நட்பின் குரல் மூலமாகப் பேசியது. உன் மிருதுவான தன்மையை நான் அல்லிமலர்களின் மென்மையில் தொட்டுணர்ந்தேன். 

தெய்வத்தாயே, விடியலைப் பிளந்து, எனக்கு உன் ஒளிமுகத்தைக் காட்டு! பகலவனைப் பிளந்து, உன் சக்திமுகத்தைக் காட்டு! இரவினைப் பிளந்து, எனக்கு உன் சந்திரவதனத்தைக் காட்டு! என் எண்ணங்களைப் பிளந்து, உன் ஞானமுகத்தைக் காட்டு! என் உணர்வுகளைப் பிளந்து, உன் அன்புமுகத்தைக் காட்டு! என் மானத்தைப் பிளந்து, உன் பணிவுமுகத்தைக் காட்டு! என் ஞானத்தைப் பிளந்து, உன் பூர்ணமுகத்தைக் காட்டு!

நான் தனிமையின் திக்கற்ற தவிப்பில் உன்னை வேண்டி ஓலமிட்டபோது, அருணோதயத்தில் நீ வெளிப்பட்டு, ஆனந்தத்தால் என்னை வாழ்த்தி வரவேற்றாய். குழம்பாய்க் கொதிக்கும் கதிரவனின் கதவுகளின் வழியே  நீ தோன்றி, என் உயிரின் துவாரங்கள் வழியே உன் ஆற்றலை ஊட்டுவித்தாய்.  என் அறியாமை இரவினை நீ கிழித்துக்கொண்டு, உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
209 Thou didst reveal Thy silver rays of speaking Silence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 18 டிசம்பர், 2021

204. மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.

எங்கள் அனைவரின் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஜோதித் தலத்தை நாடி பல நிஜமான பாதைகளில் பயணிக்கின்றோம்.

பல்வேறு மதங்கள் எல்லாம் உன் ஒரு உண்மை மரத்தின் கிளைகள் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட ஆகம உபதேசங்களெனும் கிளைகள் அனைத்திலிருந்தும் தொங்கும், பிரக்ஞானத்தால் சோதிக்கப்பெற்ற, கனிந்த, சுவையான ஆன்ம-ஞானப் பழங்களை நாங்கள் சுவைத்து இன்புற எங்களுக்கு அருள்புரி. 

ஒன்றேயான உன் அமைதிக் கோயிலில், நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை, நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. அந்த ஆன்ம கீதத்தின் மூலம் நீ உன் அமைதிச் சபதத்தை விட்டு, எங்களை அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் தூக்கி அமர்த்திக் கொள்வாயாக. அதன்மூலம் எங்கள் எல்லா மென்மையான பாடல்களிலும் உன் பாடலின் சாரத்தைக் கேட்போமாக.     
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
204 Save us from religious bigotry.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 17 டிசம்பர், 2021

201. எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி.

நெடுங்காலத்திற்கு முன் நான் ஒரு மனோ டார்ச்விளக்கை உபயோகம் செய்து கொண்டிருந்தேன். அதனைக் கணத்திலே வேலைபார்க்குமாறு செய்வேன், உடனே அது தேடும்-ஒளிக்கீற்றை வீச ஆரம்பிக்கும். அவ்வொளியில் நான் தேடிப் பலப்பல பொன்னிறமாய் ஜொலிக்கும் ஆக்கப்பூர்வ-சிந்தனைப்-பொடிமீன்களை பிடித்துள்ளேன்.

அவற்றைத்  தூண்டில்புழுவாக வைத்து என் உணர்வுநிலைக் கடலிலுள்ள பெரிய கடல்வாழினங்களையும் பிடித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரே இருட்டாக இருக்கும், மேலும் என் விளக்குபொருந்திய வலையின் சுற்றளவு சிறிதாக இருந்ததால், பல நயமான வகைகள் நழுவிவிட்டன. 

இப்போது, நான் பல டார்ச்விளக்கு-வலைகளை அடுக்கி ஒரு கட்டாக சுமந்துசெல்கின்றேன். அவைகளை நான் எல்லோரிடமுமிருந்து, பொன்னால் பின்னப்பட்ட கனவுகளினாலும், வெள்ளியினாலான பாடல்களினாலுமான அரிய நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளேன். எண்ணற்ற இந்த விளக்குபொருந்திய இழு-வலைகளை எல்லாம் ஒருங்கே பின்னி, நான் உன் ஞானக் கடலில் வலைவீசுவேன். பார்! உன் இன்னும் பிறவா நற்குணங்களெனும் முட்டைகள், பிரகாசிக்கும் உணர்வுகளினாலான பொடிமீன்- கூட்டங்கள், பொன்மய செயல்கள் - இவையனைத்துடன் இறுதியாக உன்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வருவேன்! 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
201 Teach me to fish for all goodness in the net of searchlights.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 16 டிசம்பர், 2021

199. நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.

சொர்க்கத்தின் குயிலான நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.

என் பாடல்கள் ஆன்ம-இலைகளின் பசுமை-பொதிந்த நரம்புகளினுள்ளே உன் உயிர்ச்சக்தியைச் செலுத்தி அவைகளைத் துடிப்புடன் அசையவைத்தன.  பல நூற்றாண்டுகாலத் தோட்டங்களில், உறங்கும் ஆன்மாக்களை விழிப்புறச்செய்து உன்னிடம் சேர்க்க, உன் பாடல்களைப் பாடியுள்ள குயில் நான். 

நல்லிதயங்களின் தோட்டங்களில் உன் பாடல்களைக் கச்சேரி செய்துகொண்டு நான் பயணிக்கின்றேன். நான் மீண்டும் மீண்டும் வருவேன், வந்து வழிதவறிய கானக்குயில்களைக் கவர்ந்து, உன் பாடல்களைக் கற்றுத்தந்து, உன் பிரபஞ்ச சுதந்திரமெனும் வான்வெளியில் அவர்களுடன்  சேர்ந்து நானும் பறப்பதற்காக மீண்டும் வருவேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
199 I perched in many trees of lives and sang Thy songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 15 டிசம்பர், 2021

198. உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.

நெடுங்காலமாக வேண்டி இறுதியாக என் கோயிலுக்குள் நீ வந்துள்ளாய். என் புலன்களின் கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன. இருட்பறவை தன் சிறகுகள் விரித்துப் பறந்துசென்றுவிட்டது. பழமையான என் காதல்கவிதையைப் புதிதாகப் பாடியிசைக்க நான் என் இதய யாழ்-தந்திகளை இயைத்துக் கொண்டுள்ளேன். என் ஆன்மாவிலிருந்து மலரும் புதிய ஸ்வரங்களைக் கொண்டு நான் உனக்குப் புதிய பொலிவுடன் துலங்கும் ஒரு கானத்தைப் பாடுவேன்.

என் கானத்தின் ஒலியலைகள் உன் பிரபஞ்ச-தாளக் கடல்மீது நடனம் புரியும்.  அப்படியே, என்னை பக்திப் பேரலைகளால் மிதக்கவைத்து உன் கரைக்கு அழைத்துச்செல்.

கான-அலைகளின் தாலாட்டே, உயிரினும் பிரியமான என் நிரந்தரத் தாயின் தாலாட்டை எனக்காகப் பாடு.

கடவுளன்பின் கந்தர்வ கானமே, என்னை உன் இனிய ராகத் தொட்டிலிலிட்டு ஆட்டி, கடவுளின் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் தூங்கச் செய்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
198 Rock me to sleep on Thy Bosom of Peace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 14 டிசம்பர், 2021

197. எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.

எங்கள் நெஞ்சிலிருந்து ஒருமித்துப் பொங்கும் எங்கள் பிரார்த்தனை நீரோடைகள் எல்லாம் ஒன்றாக இணைந்து பெருவேகத்துடன் பாய்கிறது. இந்த அகலமான, ஆழமான பிரார்த்தனை நதிகள் அனைத்தும் உன் சன்னிதானமெனும் கடலைத் தேடி அதிவேகமாக ஓடுகின்றன. எங்கள் வெள்ளம், அலட்சியமெனும் தடைகள், மயக்குறு மனிதப் பழக்கவழக்கங்கள், லோகாயத-விகல்பங்கள் என இவையாவற்றையும் தகர்த்துக் கொண்டு பாய்கின்றது. எங்கள் வெள்ளம் சோதனைகளாலும் வாழ்க்கை அனுபவங்களாலுமான பரந்த பிரதேசத்தில், மனித அறியாமையெனும் மணல்களின் வழியாக ஓடிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆயினும், உன் கடற்கரை வெகு தொலைவில் இருப்பதுபோல் தோன்றுகின்றது,  தாகத்துடன் கூடிய  எங்கள் வெள்ளம் உன் பிரகாசமான பெரும்பரப்பைத் தேடி பரபரப்பாக ஆனால் உறுதியாக சென்று கொண்டுள்ளது.

உன் கருணை மழையை இடைவிடாமல் அடைமழையாய்ப் பொழி. எங்கள் பிரார்த்தனை வெள்ளங்களை பலப்படுத்தி, எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் கரைக்கு அவைகளை விரைந்துசெலுத்தி ஜெயமடையச் செய்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
197 Mayest Thou reinforce our blended prayers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.

நீளமான, துரதிருஷ்டமெனும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியாக, நெடுங்காலப் பிரிவெனும் மனோராஜ்ஜிய இடைவெளிகளைத் தாண்டி, முடிவற்ற ஜென்மங்களெனும் பந்தயத் தொடர் பாதைகளில் ஓடி, பல லட்சியங்களெனும் படிக்கட்டுக்களைக் கடந்து, பல்வேறு ஆசைகளெனும் வழிகளைப் பின்தொடர்ந்து, சோகமும் இன்பமும் மாறிமாறி வரும் சுழல்பாதைகளிலிருந்து விடுபட்டு - இறுதியில் நான் என் பயணத்தின் முடிவில் நிற்கின்றேன். நான் என் கடந்த அனுபவங்களை இனிமையாக நினைவுகூர்கின்றேன்; ஒவ்வொரு கடந்த காலத்துத் துன்பமும், இப்போது ஒரு இனிமையான ஆனந்தக் கண்ணீரூற்றைத் திறந்துவிடுகின்றது. உன் மேலுள்ள அன்பினால் பரிமளிக்கும் அந்தப் புனிதமான கண்ணீரில், நான் தினமும் ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
196 I baptize myself in the sacred waters of my tears of love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 11 டிசம்பர், 2021

188. என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.

உன் வருகையால் என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. கடவுளே, நீ வந்தபோது எல்லாமே ஜீவகளையுடன் பிரகாசித்தன. கோயிலில் நான் நின்றிருந்த இடத்தில் பளிங்குத்தளம், உன் சாந்நித்தியதால் எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. உன் தொடுகையால் ஜடப்பொருட்கள் உணர்வுப் புனருத்தாரணம் பெற்று, எல்லாப்புறங்களிலுமிருந்து அவை பேசின. உன் ஆனந்த நறுமணத்தைச்  சுமந்து, நிஸ்சலமெனும் சுகந்தமான காற்று எல்லாப்பக்கங்களிலும் தவழ்ந்து பரவியது. 

உடைந்துபோன அமைதிப்பாறைகளின் அடியில் மறைந்திருக்கும் உன் சரணாலயத்தைக் கண்டுகொண்டேன்.

புனிதமெனும் தூய பலிபீடத்தின் மேல் உன் ஆனந்தப் பேரூற்று துள்ளிக் குதிக்கின்றது.

ஏந்திய என் உள்ளங்கைகளில், உன் ஆறுதலெனும் உயிரூற்று நீரை வாங்கி அருந்துகின்றேன். இனி எனக்கு தாகமென்பதே கிடையாது என்பதை நான் அறிகின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
188 Many doors opened before me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 9 டிசம்பர், 2021

187. உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.

என் கனவுகளினாலான தோட்டத்தைத் தேடி, உன் நாமத்தை ரீங்காரித்து, இடையறாமல் எண்ணிலடங்கா மைல்கள் தூரம் நான் பறந்துசென்றேன்.

நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி; ஆயினும், என் செயலாக்க இறகுகளை எப்போதும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனில், உயர்ந்தோங்கிய மலையுச்சி நிகர் கனவுகளில் வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும் உன் அரிய பூந்தோட்ட மலர்களைத் தேடி நான் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. 

நான் உன் நாமத்தை ரீங்காரிக்கும் ஒரு ரீங்காரப்பட்சி, அதன் உணர்வெனும் நீண்ட அலகுகளைப் பொன்மய, நீலவண்ண, செந்நிற, மற்றும் பலவண்ண மலர்-குணங்களின் நெஞ்சில் ஆழ்த்தி சுவைக்கின்றது. தீயனவற்றின் கடுக்கும் தேனை சுவைப்பதிலிருந்து என்னை உன் அருள் காக்கட்டும். 

உன் சோர்வடையா அபரிமித சக்தியினால் நான் துறுதுறுவென்று ரீங்காரித்து, உன் புகழ்மகிமையாலான தொங்கும் தோட்டங்களிலும், பணிவான மனித இனிமை மேவும் பாதையோரகளிலும் வளரும் அன்பினால்-தோய்ந்த மலர்களிலிருந்து மதுரத்தை அருந்தும் நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
187 Bless Thy Humming Bird to drink of Thy honey.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 7 டிசம்பர், 2021

186. நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.

பரந்து விரியத்தக்கப் பொன்மய இறக்கைகளையும், மிருதுவான கோமள சிறகுகளையும் கொண்டு வர்ணப் பொலிவுடன் அழகிய ரூபத்தில் உன்னால் சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கலோகப் பறவை நான்.

முன்னேற்றத்திற்காகத் தணியாத ஆசைகொண்ட என் இறக்கைகளை வீசி, சாந்தி சொர்க்கத்தை நாடி, இறுக்கமான வாழ்க்கை வானத்தில் நான் இடையறாமல் சிறகடித்துப் பறந்துள்ளேன். 

கலக்கமெனும் இருள் பலமுறை என் பிரகாசமான மனத்தின் இலகுவான இறகுகளை மூடி, அவற்றின் ஒளியை மங்கச் செய்துள்ளன.

கடவுளே, மாசடைந்த உன் சொர்க்கலோகப் பறவையை உள்காட்சியெனும் தூய்மைப்படுத்தும் சூரிய-ஒளிக் கதிர்களாலும், இனிமையாக சலசலக்கும் சாந்தி நீரோடையிலும் நீ நீராட்டு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
186 I want to be Thy cleansed Bird of Paradise.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 6 டிசம்பர், 2021

177. உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.

அன்பின் ஊற்றே, உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் எங்கள் நெஞ்சங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை நாங்கள் உணருமாறு செய். எங்கள் ஆசைநதிகள் எல்லாவற்றிற்கும் ஆதிமூலமே, எங்களை அற்பமான புலனின்ப மண்ணில் பாய்ந்து, வறண்டு ஆவியாகிப்போகாமல் இருக்க எங்களுக்குக் கற்பி. 

எங்கள் ஆசைநதிகள் பணிவு, சுயநலத் தியாகம், பிறர்நலம் பேணுதல் எனும் எல்லா தாழ்வான நிலங்களின் வழியேயும் பாய்ந்து, இறுதியில், உன் அருட்கொடை மழையினால் மேலும் பெருகி, அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்க நாங்கள் உரிமையுடன்-வேண்டுகின்றோம்.

எங்கள் அனுதாபம், அன்பு, பாசமெனும் கிளைநதிகள், வறண்ட சுயநலமெனும் பூமியில் வழியே பாய்ந்து அருகிப் போகாமலிருக்க எங்களுக்கு அருள்.

உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பின் தனித்தனியே பிரிந்து ஓடும் சிற்றோடைகள் எல்லாம், இறுதியில் அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்கட்டும்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
177 I want to merge in the vastness of Thy Presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
Compare with:
71 Flood me with Thine Omnipresent Love.
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

176. நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.

தவறான சுகங்களின் மயக்கும் தீ, அதனுடன் விளையாட உன் குழந்தைகளைக் கவர்ந்தது. அந்த நாசமேற்படுத்தும் ஜ்வாலைகளின் கறுக்கி, வடுப்படுத்தும் விளைவுகளைக் குறித்து உன் அமைதியான குரல் அவர்களை எச்சரித்தது. ஆனால் அவர்கள் உத்வேகத்துடன் அந்த அற்ப சுகத்தின் கனல்களை முனைந்து பற்றிக் கொள்ள விழைந்தனர். விழுங்கும் தழலின்கண் பலர் அவர்களின் பேராசைக் கைகளை அழுத்திக் கோரமாக அடிபட்டுக் கொண்டனர். பின், அவர்களின் அதிருப்திக் காயங்களும், சிற்றின்ப திகட்டல்களும், உன் உதவியை நாடி, உனக்காக அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தன.

பெரும் பொறுமையுடைய மருத்துவரே! என்றும்-தவறாமல் குணமாக்கும் உன் மன்னிப்பும் அன்பும் கலந்த மருந்துக் களிம்பை வைத்துக் கொண்டு நீ  அருகிலேயே நிற்கின்றாய். உன் எச்சரிக்கும் குரலை நாங்கள் கேட்கக் கற்றுக் கொடு; அதன்மூலம், நாங்கள் தேவையற்ற வேதனையால் துடித்து, அனாதரவாய்க் கதறாமல், மாறாக உன்னை நோக்கி இனிய பாட்டுக்களாய்ப் பாடுவோம்.

நாங்கள் உன் சொல் கேளா குழந்தைகள், இவ்வுலகின் தீய கேளிக்கைகள் எங்களைச் சுண்டி இழுக்கிறது. அவற்றின் இழுவைக்கு ஆட்படாமல், தெய்வீகமான உன் பேருணர்வு ஜோதியுடன் மட்டுமே இனி நாங்கள் விளையாட எங்களுக்குக் கற்றுக் கொடு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
176 We are Thy burned children, wailing for Thy help.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

175. என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.

தெய்வத்தாயே, உனக்கு நாச நாட்டியம் (நாஸ்யம்) ஆடுவதில் பிரியம். 

பலவீனமான அழியும் (உடற்) சுடர்களை உன் நாசமேற்படுத்தும் போர்-நடனத்தில் சிதைவிக்கின்றாய், அதன்மூலம், எங்கள் ஆன்மாக்கள் சிதையாமல் பத்திரமாக இருப்பதை நீ புன்னகையுடன் காட்டுவதற்காக.

உன் கருணையினால், நீ எங்களைச் சுற்றி மூடியிருக்கும் கடினமான மாயமோகங்களின் களிம்புப் படலத்தைத் தேய்த்து அகற்றுகின்றாய்.

தெய்வத்தாயே, நீ அழிவு நடனத்தை விரும்புவதினால், நான் என் ஆசைகள், குறைகள், பலவீனங்கள், குறுகிய குணங்கள் ஆகிய அனைத்திற்கும் அவை என்றும் திரும்பாவண்ணம் ஒரேயடியாய்க் கொள்ளிவைத்துவிட்டு, தீயனவற்றை ஒழிக்கும் உன் நாட்டியத்தில் இணைந்து ஆடுகின்றேன்.

தெய்வத்தாயே, இப்போது என் குறுகிய தன்மை விட்டொழிந்ததால், நீ அழிக்க வேண்டுவது என்னுள் எதுவும் மீதமில்லை, ஆகையால் உன் அழிவு நடனத்திற்குப் பதிலாக என்னுள் உன் வரம்பற்ற அன்பு நடனத்தை ஆடு.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
175 Dance in me Thy dance of Infinity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 2 டிசம்பர், 2021

174. என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.

உன் வரம்பற்ற பார்வையின் கைத் தொட்டிலில் என் குறுகிய தன்மை துயில் கொண்டிருந்தது. மிருதுவான உன் சாந்தமெனும் பாதத்தின் காலடியோசையைக் கேட்டு, சத்தம்செய்யும் சிற்றின்பங்களின் இரைச்சல் தணிந்துள்ளது.

நான் விழித்துக்கொண்டு காத்திருந்தேன். 

அமைதியின் அரசே, சிமிழ்க்கையுடனான  குதூகலங்கள், ஆன்ம-கானங்கள், மந்திர ஜபங்கள் உன்னை வரவேற்க எழுச்சியுடன் உன் சாந்தம்-பொதிந்த அரியணையை நோக்கிச் செல்கின்றன.

இருளினாலே மறைக்கப்பட்ட சிதைந்த கனவுகளின் வைரத்துகள்கள், உன் மின்னொளி வீசும் வரவினால் மங்கி மினுமினுத்தன. 

நான் என் ஞாபகப் பெட்டகத்துள் பூட்டி வைத்திருந்த என் அனைத்துப் புனிதப் பேரார்வங்களையும், எனக்குமுனக்கும் இடையேயுள்ள விலைமதிப்பற்ற ஒப்பந்தங்களையும் வெளியே எடுத்து, அவற்றை அன்பின் ஒப்பற்ற மதிப்புடைய செம்பொன்னாகப் பண்டமாற்று செய்தேன். அவற்றைக் கொண்டு நான் உனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு ரகசிய கோயிலை என் ஆன்மாவிற்குள் எழுப்புவேன், அங்கு உன் சாந்த அரியணை அமைந்திருக்கும். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
174 I locked my sacred aspirations in my soul-vault.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 29 நவம்பர், 2021

172. என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.

என் ஆன்மாவின் தேடும் நீர்மூழ்கிக்கப்பல், லோகாயத குறிக்கோள்களெனும் இருண்ட வாயுப்பிரதேசத்தை விட்டு வேகமாக விலகி, வழித்தடமற்ற பிரபஞ்சப் பேருணர்வெனும் ஆழமான பிரதேசத்திற்குள் ஆழ்ந்து தாவியது. 

திமிங்கிலத்தைப் போல நீந்தி, என் மனோ நீர்மூழ்கிக்கப்பல் மிகவும் அடியாழமான சூட்சுமக் கடல் பிரதேசத்திற்குள் உன்னைத் தேடிச் சென்றது. மிகுந்த தேடலினால் களைத்த என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பலின் தேடும் ஒளிக்கண்கள், திடீரென உன் அருளாசியினால் புலனாதீத சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கியது; நான் உன் இருப்பினை எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள ஆரம்பித்தேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
172 My soul-submarine is searching for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 28 நவம்பர், 2021

171. உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.

தவிர்க்கமுடியாத நிகழ்வுகளின் பிரளயகால மேகங்கள் வந்து இடிஇடித்தன; அற்பமான சுகங்களாலும் நையப்புடைக்கும் சோதனைகளாலுமான மழை அடையாய்ப் பெய்து என் தைரியத்தாலான மண்நிலத்தை நன்கு நனைத்து மூழ்கடித்தது; பலகோடி இடைஞ்சல்கள் என்னைக் குத்துவதற்குத் தயாராக அழிவெனும் கத்தியுடன் முளைத்தன. 

எதிர்ப்பாராத விளைவுகளெனும் பீரங்கி குண்டுகள் அதிரடி செய்யும்போதும், துன்பங்களெனும் துப்பாக்கி ரவைகள் என்னைச் சுற்றிலும் வேகமாக வந்து விழும்போதும், நான் உன் என்றுமழியாக் கரங்களாலான துளைக்கமுடியாத கோட்டையினுள் காக்கப்பட்டுள்ளேன் என்பதை நீ எனக்கு உணருமாறு செய். 

கடும்போராட்டமெனும் இருண்ட மரத்தின்மீது உன் பாக்கியமெனும் ஒளி வந்து விழும்போது, அதன் மலர்கள் நன்கு மலர்ந்து நன்றியைப் பிரதிகூலமாகக் காட்டி, உன் அருட்கருணையின் ஜோதியை வரவேற்பது எளிது. 

துர்பாக்கியமெனும் இருண்ட இரவுகளிலும், என் நன்றி மலர்கள் புனிதமான அமைதியெனும் உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை வீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
171 I want to pour the scent of gratefulness at Thy feet.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 26 நவம்பர், 2021

159. பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

நான் அமைதிக்கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தேன். கண், காது, சுவை, நுகர்வு, தொடுவுணர்வு ஆகிய மினுமினுக்கும், கவனத்தைக் குலைக்கும் மின்பல்புகளை அணைத்தேன்; ரத்தத்தை-சுத்தீகரிக்கும் மூச்சினைச் சத்தம் செய்யாமல் இயங்குமாறு பணித்தேன். தெய்வத்தாயே, உன் காலடிச்சப்தம் கேட்டவுடன், என் பலகோடி உயிரணுக்களை ஸ்தூல ரத்தத்தினால் அடிமைப்படுத்தும் இதயத்தை நான் அவ்விதம் செய்யாமல் இருக்கச் சொன்னேன், ஏனெனில், நீ வரும்போது உன்னுடன் உயிரளிக்கும் ஆன்மீகக்கதிர்கள் நிரம்பிய குவளையை ஏந்தி வந்தாய். 

தெய்வத்தாயே, அவைகளால் எனக்கு மேன்மேலும் ஊட்டிவிடு! இதயம்,  உயிரணுக்கள், மனம், எண்ணங்கள் ஆகியன இனி தேய்மானம் அடையாது, ஏனெனில், உன் நிரந்தர உயிரினால் சாகாத்தன்மை பெற்றதால்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
159 Demand to be fed with Cosmic Rays.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 25 நவம்பர், 2021

156. மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

வரம்பற்ற பேருணர்வே, உன் இருப்பு கதகதப்பான சூரியனின் கதிர்களிலும், குளிர்ந்த நிலவொளியிலும் சமமாக மேவி அவைகளின் பின் மறைந்துள்ளது. அந்த ஒளிமண்டலங்கள், அழகிய இயற்கைக்கன்னியின் பொருள்களாலான மேலாடையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதேயன்றி உன்னைக் காட்டுவதில்லை; எனவே, அவைகள் என்னைப் பொறுத்தவரை இருட்டிற்குச் சமானம். இவ்விதமாக, சர்வத்தையும்-பிரகாசிக்கும் உன் பெருஞ்ஜோதி பொருட்களை-பிரகாசிக்கும் ஒளிமண்டல இருளிற்குப் பின்னால் மறைந்துள்ளது. இந்த இருளை விலக்கு! நான் சுய இருளினால் சூழப்பட்டு, என் கண்களை மூடி அமர்ந்திருக்கையில், மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பின் பிரகாசம் என்னுள் சுடருமாறு செய்; அந்த ஒளியின்மூலம் நான் உன்னை வழிபடும் கண்களால் தரிசிப்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
156 Demand for the rising of the Aurora of Intuition.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 24 நவம்பர், 2021

155. கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்தினைக் காண எனக்கருள். அது என் மனிதக்கண்களின் முன் அல்லும் பகலும் பிரகாசிக்கட்டும். வெகுகாலமாய் லோகாயத விஷயங்களின் பொய்யான-ஜொலிப்பில் என் கண்கள் குருடாகியுள்ளன. நான் அவைகளை எப்போதும் வெளிமுகமாகவே பார்த்து வந்ததால், அவற்றின் உள்ளேயுள்ள பேருணர்வைப்  பார்க்க இயலவில்லை. நான் பொருட்களெனும் கடுகு-விதைகளைத்தான் கண்டேனேயன்றி, அதனுள்ளே மறைந்திருக்கும் பேருணர்வெனும் எண்ணெயைக் காணவில்லை. ஞானதிருஷ்டி அளிக்கும் என் மூன்றாம் கண் இப்போது திறந்து கொண்டுள்ளது. அதை, நீ எப்போதும் திறந்தே வைப்பாயாக. மெய்யுணர்வின் அந்த ஒருமைக்கண் என்னைப் பொருட்களின் திரையை  ஊடுருவி, கிறிஸ்துவின் [கூடஸ்த சைதன்யத்தின்] வரம்பற்ற இருப்பை எல்லாவிடங்களிலும் காணுமாறு செய்வாயாக. என் புனித, அறிவார்ந்த எண்ணங்கள், இந்த ஞான நட்சத்திரத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்று, எல்லாவற்றிலும் கிறிஸ்துவை சந்திக்குமாறு எனக்கருள்வாயாக. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
155 Demand for the opening of the spiritual eye, the Eastern Star of Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 22 நவம்பர், 2021

154. என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.

நான் தீயன கேட்காமலிருக்க, தீயன பார்க்காமலிருக்க, தீயன பேசாமலிருக்க, தீயன கனாக்காணாமலிருக்க, தீயன எண்ணாமலிருக்க, தீயன உணராமலிருக்க எனக்கருள். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
154 Keep me away from evil.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

153. என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.

நான் நல்லவற்றைத் தவிர வேறெதையும் காணாதவாறு எனக்கருள். நான்  சுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் தொடாதவாறு எனக்குக்கற்பி. நான்  உன் குரலை மட்டுமே எல்லா நற்சொற்களிலும் கானத்தின் இனிமையழகிலும் கேட்குமாறு என்னைப் பழக்கு. பேருணர்வின் மலர்களிலிருந்து வீசும் தூய மணத்தை மட்டுமே நுகருமாறு என்னை வழிநடத்து. ஆன்ம-புஷ்டியளிக்கும் முழுமையான ரசத்துடனுள்ள உணவை உண்டுகளிக்க என்னை அழை. உன் தொடுதலை நினைவுபடுத்துவதையே நான் தொடுமாறு எனக்குக்கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
153 Teach me, that my senses may contact nothing but the good.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 20 நவம்பர், 2021

151. என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.

என்னால் என்னை ஆட்கொள்ள நீ எனக்குக்கற்பி. என் ஐம்புலக் குதிரைகளை மனக்கடிவாளத்தினால் பூட்டி, என் விவேகமெனும் தேரோட்டி அவைகளை நன்கு வழிநடத்த நீ எனக்கு அருள்புரி. என் ஜீவாத்மா, இந்த உடம்பெனும் சிறு தேரில், ஒழுக்கமெனும் சக்கரங்களுடன், பற்பல பூலோக-ஜென்மங்களெனும் வேகவழிப்பாதைகளில் வெற்றிகரமாக சுற்றி, இறுதிப் பந்தயத்தின் கடைசிச் சுற்றில் ராஜாதிராஜனின் வரம்பற்ற அரசத்தேரில் தான் பத்திரமாக அமர்ந்திருப்பதை உணரும்வரை, ஓடிக் கொண்டேயிருக்கட்டும்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
151 Lead my body-chariot on the right path (Inspired by the Hindu Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

149. இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

மாயமோகத்தினாலான இருண்ட காட்டில், நான் பக்தியெனும் நெருப்பைப்  பற்றவைத்தேன், ஆனால் புகைமூட்டத்தினால் அதன் தீ வளர்வது தடைப்பட்டது. பின்பு, நீ வந்து சில பலவீனங்களுக்குத் தீ வைத்தாய். உன் நெருப்பு சீக்கிரமாகப் பரவி, என் ஆசைகளெனும் முட்செடிகள், டாம்பீகமெனும் நெட்டையான மரங்கள், முரட்டுத்தனமெனும் அடர்ந்து மண்டிய புதர்கள் என இவையாவற்றின் மீதும் விரிந்தது. என் இருளினாலான முழு காடும் எரிகின்றது; உன் ஒளியை நான் எல்லாத்திசைகளிலும் காண்கின்றேன். இறைத்தந்தையே, உன் உதவிக்கு நான் நன்றிகூர்கின்றேன். நான் அனைவருக்காகவும் ஒளியினாலான பாதையை உருவாக்க விரும்புகின்றேன் - எனக்கு நீ இப்போது உதவியது போல் எப்போதும் உதவு!

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
149 Demand to set fire to the forest of darkness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 18 நவம்பர், 2021

148. நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.

உன் வருகையை எதிர்நோக்கி என் இதயத் தோட்டத்தில் என் பக்தி மலர்கள் மலரட்டும். அம்மலர்களை மாலையாய்க் கோர்த்து, அதை உனது பாத சரணங்களிலே சமர்ப்பிப்பேன்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
148 I offer Thee a garland of devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 17 நவம்பர், 2021

147. அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

நான் என் சுய இச்சாசக்தியை உபயோகிக்க விரும்புகின்றேன்; ஆனால், இறைத்தந்தையே, அதை நீ பூரண திருப்தியெனும் பொன்மய சொர்க்கத்திற்கு வழிநடத்து. நீ என்னைப் பலனற்ற ஆசையாலும், தளரும் நம்பிக்கையாலுமான சிறைக்கதவுகளுக்குப் பின்னால் என்னைக் குறுக்கி அடைக்காமல் இருப்பதை அறிவதனால், நான் அனந்தத்தின் ஆனந்தக்குழந்தையாக இருப்பேன். 

நான் பழிக்கத்தகு சோம்பல் சங்கிலிகளை உடைத்தெறிவேன். அதனால், பயமற்ற சுதந்திரத்துடன் அடியெடுத்து வைத்து, குறுக்கங்களும், மாயமோகங்களுமாலான காட்டினை மின்னல்போல் கடந்து செல்வேன்.

என் புல்லிய அஹங்காரம், "என் பெருமையைக் காண்! என்னை வழிபடு!" என மதம்கொண்டு பீற்றுகிறது. ஆனால், நான் அதன் மாயத்தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, கற்பனைக்கெட்டாத அழகுடைய மற்றொரு ரூபத்தைக் காண்பேன். அமைதியுடன் இயைந்த என் ஆன்மக் காதுகளால், உன்னைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் அந்தத் தூசிநிகர், மார்தட்டும் மாயவித்தைக்காரனைக் கேட்பதைத் தவிர்த்து, உன் ஒப்பரியாத குரலினால், "நானே அவன்!" என்று காலங்காலமாக சன்னமாக ஒலிக்கும் பிராணவாயுச் சிறகுகளுடன் கூடிய மணங்கமழும் சங்கீதத்தை நான் மனம் லயிக்கக் கேட்பேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
147 Demand not to be enslaved by the ego or by passivity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 14 நவம்பர், 2021

146. கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல்.

உக்கிரமான எதிரிகள், பிடிமானமுடைய அசுத்த சஞ்சலமனப் பழக்கங்கள், என் இதய எல்லைக்குள் அவ்வப்போது புகுந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. என் சாந்தச் செழிப்பைக் கொள்ளையடிக்க யத்தனிக்கும் அந்த எதிரிகளை நான் வெல்லுமாறு செய். என் போராடும் சக்திகளை ஊக்குவித்து பூரணதிருப்தியெனும் ராஜ்ஜியத்திற்கு நீ வழிநடத்து.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
146 Demand to eject enemies of bad habits.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

145. என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய்.

ராஜாதிராஜனே, சுயக்கட்டுப்பாடு, சாந்தம் எனும் நற்குணங்களைக் பயில்விக்கும் ஒழுக்கக் கலாசாலையில் எனக்கு நீ பயிற்சிகொடு.  ஆக்கிரமிக்க முனையும் இருள், பற்று, பேராசைக் கூட்டங்களுக்கு எதிராக நீ, பகவான் கிருஷ்ணரைப் போல, நற்குணங்களுக்குத் தெய்வ நாயகனாயிருந்து போரில் அவைகளை வழிநடத்த வேண்டும். என் மனத்தின் மேலுலக ராஜ்ஜியத்தினுள் வலிமையான தீய படைவீரர்கள் நுழைவதைத் தடுத்து நீ காக்க வேண்டும். உன் சமாதானக் கொடி என் ஆன்ம உயிர்மண்ணில் எப்போதும் தொடர்ந்து பறக்கவேண்டும்.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
145 Make me win the battle of life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 12 நவம்பர், 2021

144. தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய்.

இறைத்தந்தையே, தென்றல் என்னைத் தொடும்போதும், சூரியவொளி என் உடம்பை மேவும்போதும் அவற்றில் உன்னை நான் உணருமாறு செய். மலர்களின் சுகந்தத்தில் விரவி என்னுள்ளே வந்து புகு. என் அத்தியந்த எண்ணங்களின்மூலம் உன்னை நான் எப்போதும் உணருமாறு செய். உன்னை நான் மறந்தாலும், என்னை நீ மறந்துவிடாதே. உன்னை நான் நினைவு கூரவில்லையெனினும், என்னை நீ நினைவில் கொள். எப்போதும், என்றும், எக்கணமும் என்னுடனேயே நீ இரு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
144 Make me feel Thee through the touch of the breeze.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 11 நவம்பர், 2021

140. உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது.

சத்தமாகவோ அல்லது முணுமுணுத்தோ சொல்லும் பிரார்த்தனை வார்த்தைகள் உன்மேலுள்ள அன்பை திருடிச் செல்லாமல் இருக்கட்டும். ஆன்மாவின் பேச்சற்ற மொழியினால், நான் உன் அவசியத்தை உணர்த்துவேன். உன் மொழி மௌனம், அம்மொழியினால் என் அமைதியின் வாயிலாக, நீ என்னிடம் பேச வேண்டும்; நீ எப்போதும் என்னை நேசித்துக்கொண்டே இருந்திருக்கின்றாய், ஆனால் நான்தான் அதனை அறியாமல் இருந்திருக்கின்றேன் என்ற உண்மையை எனக்கு உரைக்க வேண்டும்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
140 Nothing can steal my love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 10 நவம்பர், 2021

139. என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன்.

உன் சன்னமான குரல், "வீடு திரும்பு", என அழைப்பதை நான் அவ்வப்போது கேட்டுள்ளேன்; ஆனால் அக்குரல் பல ஜென்மங்களில் மேவிய முரட்டுத்தனமான ஆசைகளின் இரைச்சலினால் அமிழ்ந்து போயின. பின்னர், முட்டிமோதும் ஆசைக்கூட்டங்களைத் துறந்தேன். என் மனம் நாடிய தனிமையில், என் பக்தியானது உன் குரலைக் கேட்கப் பேராவலுடன் பொங்குகின்றது. என் மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கும் இந்த பூலோக சத்தங்களின் கனவுகளை அப்புறப்படுத்து: என் ஆன்ம சாந்தத்தில் என்றும் ரீங்காரம் பாடும் உன் அமைதியான குரலை நான் கேட்க விரும்புகின்றேன்.           

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
139 I want to hear Thy song in the silence of my soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 9 நவம்பர், 2021

138. என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற.

நான் தனிமையில் திக்குத்தெரியாமல் கதறியழுது கொண்டிருக்கின்றேன். கண்கள் மூடியவாறு, இருளின் கதவுகளை வெகுகாலமாய் தட்டிக் கொண்டிருக்கின்றேன், அவை திறந்து உன் ஒளியை வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையால். என் நெஞ்சிலுள்ள கோடிக்கணக்கான தாப ஏக்கங்களால், உனக்காக நான் ஏங்குகின்றேன். நீ வருவாயா?  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
138 Open my soul's secret door.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

137. உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு.

பக்தியின் மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு: நான்  சாகும்வரை உன்னுடையதைக் குடித்துக் கொண்டே இருப்பேன். என் உலக ஆசைகள் மடிந்து, உன்னுள்ளேயே இனி நான் எப்போதும் வாழ்வேன். என் உடம்பின் ஒவ்வொரு உயிரணுவிலும் சிலிர்ப்பூட்டும் ஊற்று பொங்கி, உன்மேல் கொண்ட என் அன்பின் ஒவ்வொரு திறவின் வழியேயும் வெளிப்படுகின்றது. பக்தியிலேயே தோய்ந்து, உன் சாந்நித்தியம் நிலவும் மேலுலகத்தினிற்குள் நுழைவேன். குருட்டுத்தனமாக அங்குமிங்குமென தேடியலைந்த என் பக்தியின் வேகம், திடீரென ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திறந்தது; ஆஹா, என்னே ஒரு ஆனந்தவுணர்வு உன் ஜோதியை தரிசிக்கும்போது! 
---
cell - உயிரணு
--- 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
137 Intoxicate me with the wine of Thy Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 7 நவம்பர், 2021

136. பக்தியெனும் சுகந்தப் போளத்துடன் நான் உங்களை அணுகுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பக்தியெனும் சுகந்தப் போளத்துடன் நான் உங்களை அணுகுகின்றேன்.

குவிந்த கரங்களால், வணங்கிய தலையுடன், பணிவெனும் சுகந்தப் போளத்தை நெஞ்சில் சுமந்து, நான் உங்களை அணுகுகின்றேன். நீங்கள் என் பெற்றோர்; நான் உங்கள் குழந்தை. நீங்கள் என் எஜமானன்; நான் உங்கள் அமைதியான கட்டளைக்கு ஏவல்செய்யத் தயாராகவுள்ளேன். அனைத்து இதயங்களிலிருந்தும் மணக்கும் பக்தியை ஒன்றுகூட்டி, என் ஆனந்தக்கண்ணீரால் கலந்து வைத்துள்ளேன். ஏக்கத்தினாலே பெருகும் என் ஒளிரும் தூய கண்ணீராறு உங்களை சந்திக்க விரைகின்றது. என் கொந்தளிக்கும் பக்திவெள்ளம் நிராசையெனும் பாலைவனத்தில் விரயமாக ஓடி வற்றாமலிக்க நீங்கள் அதைக் கவனிப்பீர்களா?  என் காட்டாற்று பக்திவெள்ளம் உங்களை அடையும் சரியான பாதையில் பாயுமாறு நீங்கள் அதைக் கண்காணிப்பீர்களா?   
---
Myrrh = போளம் (சாம்பிராணி வகை)
--- 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
136 I bring for Thee the myrrh of devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 5 நவம்பர், 2021

131. என் உள்முகக் கண்ணினைத் திற.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் உள்முகக் கண்ணினைத் திற.

பெருஞ்ஜோதிச் சுடரூற்றே, என் உள்முகக் கண்ணினைத் திற, அதன்மூலம் நான் பலவித வர்ணங்களிலாலான அணுக்களின் நடனங்களுக்கு நடுவே உன்னைக் கண்டுகொள்வேன். என் வானவெளியின் கதவுகளைத் தகர்த்தெறி, அதன்மூலம் நான் ஜடப்பொருள்களின் மாயமேக மூட்டத்தினையூடுருவி அதன் பின்னே உன்னை காண்பேன். பிரகாசமான பிரபஞ்சக் கதிர்களின் மதில்சுவர்களுக்குப் பின்னே நீ மறைந்து நிற்கின்றாய். வாயிற்கதவைத் திற, அதன்மூலம் உன்னை நான் எல்லாவிடங்களிலும் காண்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
131 Open my Inner Eye.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 3 நவம்பர், 2021

130. அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல்.

அனைத்துவகையான அன்பினிற்கும் கடவுளான உன்னை, நான் எல்லா மனித நேசங்களின் அன்பினால் நேசிக்க வந்துள்ளேன். நீயே காக்கும் தந்தை. தனது பெற்றோர்களிடம் மழலையன்பு காட்டும் சிறு குழந்தையும் நீயே. வரம்பற்ற கருணையைப் பொழியும் தாயும் நீயே. ஆருயிர் அன்பர்களுக்கிடையே பாயும் முழுமையான சரணாகத-அன்பின் உயிரோட்டமும் நீயே. நீயே நண்பர்களின் சிநேகித அன்பு. ஒரு சேவகன் தனது எஜமானனிடம் காட்டும் மரியாதையால் என்னைத் தூய்மைப்படுத்து. இம்மையிலும், மறுமையிலும் வற்றாத அன்பின் நீரூற்றான உன்னை, நான் அனைத்துவித தூய அன்பினாலும் நேசிக்க எனக்குக்கற்பி. அனைத்து அன்பினாலும் தெளித்து என்னை நீராட்டு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
130 Demand to see the love of God in all human love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 1 நவம்பர், 2021

129. என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்.

இறைத்தந்தையே, மாகாற்றால் அலைக்கழிக்கப்பட்ட என் உள்ளம், என் அலட்சியமெனும் மேகங்களினால் மறைக்கப்பட்ட உன் சாந்நித்தியத்தின் வெள்ளிக்கீற்றின் தரிசனத்தைப் பெற நான் பிரார்த்திக்கிறேன். உன் நம்பிக்கையெனும் சந்திரன் என் இதயத்தில் குளிர்கிரணங்களை வீசட்டும். என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்; உன் அன்பின் நிலவொளியின் ஏற்றத்தினால் அறியாமை மூட்டங்கள் விலகுகின்றன. ஒளியின் தந்தையே, சிதிலமடைந்த என் உள்ளப் படகு உன் ஆனந்தக் கரையை மகிழ்ச்சியுடன் தரிசிக்கின்றது. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
129 Thou art slowly rising on the horizon of my mind.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 30 அக்டோபர், 2021

128. நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன்.

ஓர் மலரைப் பார்த்து வழிபட ஆரம்பித்தேன். திடீரென, இறைத்தந்தையே, நீ அங்கு மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன். உன் சாந்நித்தியத்தின் நறுமணத்தை அது வீசியது. உன் தூய்மையின் அழகு அதன் இதழ்களை அலங்கரித்தது. உன் ஞானத்தின் சொக்கத்தங்கம் அதன் இதயத்தினின்று ஒளிர்ந்தது. அனைத்தையும் அரவணைத்துத் தாங்கும் உன் சக்தி நளினமான புறவிதழ்களை நிரப்பியது. வாழ்வின் ரகசியமும் உன் என்றுமழியாத் தன்மையும் மகரந்தத்தில் பொதிந்து - உன் இன்னமுதைச் சுவைக்கும் வண்டின் நெஞ்சின் மேல் மேவியது. சாலையோரத்தில் வளரும் சின்னஞ்சிறு தளையின் நெஞ்சினுள்ளும் பிரதிபலிக்கும் உன் தோற்றத்தின் அற்புதத்தை எனக்குக்கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
128 I beheld Thee hiding behind the flowers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 29 அக்டோபர், 2021

127. வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.

தெய்வத்தாயே, எல்லோரையும் மரணம் மறைவாகப் பின்தொடர்ந்தாலும், தீரர்களானவர்கள் அங்குமிங்குமெனப் பறக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே செல்லும்போதும் புன்னகைப்பார்கள். ஆனால் நான் புன்னகைக்கின்றேன், ஏனென்றால் நிகழும் இந்த வாழ்க்கையலைகளின் மேலே நான் மிதந்தாலும், மரணச் சுழலலையின் அடியில் நான் மூழ்கினாலும், உன் காக்கும், சர்வவியாபக நிரந்தரமான வாழ்க்கையில் நான் - உன் என்றுமழியாக் கரங்களால் அரவணைக்கப்பட்டு - அமைதியாக வீற்றுள்ளேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
127 Whether dead or living, I am held in Thine Immortal Arms.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 27 அக்டோபர், 2021

114. கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, என் பிரார்த்தனைக்கு அடித்தளமாக நீயிருந்தும், ஏன் நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய்? என் உணர்வுகளில் நீ அதிர்ந்தாலும் என் எண்ணங்களின் திரைக்குப் பின்னாலிருந்து உன் சாந்நித்தியம் வெளிப்பட்டாலும், நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய். வா, தந்தையே, வந்து இந்தத் திரையை விலக்கு! வா, எந்தையே, வா! என் பிரார்த்தனைகளின் குரலைக் கேள். நான் உன்னை அறிய விரும்புகின்றேன். நான் உன்னிடம் பேச விரும்புகின்றேன். நான் உன்னிடம் பிரார்த்திக்க விரும்புகின்றேன்; நீ என் பிரார்த்தனைகளைக் கேட்பதையும் நான் அறிய விரும்புகின்றேன். உன்னிடம் என்னை அழைத்துச் செல்லும் பாதையை எனக்கு காண்பி.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
114 Demand for the realization of God's presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 25 அக்டோபர், 2021

112. எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, வானத்தின் துளைகள் வழியேயும், நட்சத்திரங்களின் மினுமினுப்பின் வழியேயும் என்னைப்பார். சூரிய சந்திரர்களின் மூலம் என்னைக் கண்காணி. என் அன்பின் வழியே என்னை நீ நேசி. தென்றல் காற்றினால் என்னைத் தொட்டுப் பராமரி. என் இதயத்தின் வழியே என்னுளே நீ துடித்து செயல்படு. இந்த என் அழியும் தேகத்தின் வழியே உன் அழியாத் தன்மையினால் சுவாசி. என் குரலின் வழியே பேசு. என் கைகளின் மூலம் மற்றவர்களுக்கு உதவு. என் மனத்தினை உபயோகித்து மற்றவர்களுக்குப் புத்துணர்வூட்டு. என் மூச்சுக்காற்றின் வழியே நீ சுவாசி, ஏனெனில் இந்த பலவீனமான வயலின் வழியே நீ மட்டுமே உன் முழுமையான, நிரந்தர சங்கீதத்தைப் பாடமுடியும்.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
112 Demand for union with the Almighty.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 23 அக்டோபர், 2021

111. எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, உன்னை நான் என்னுள்ளே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை வெளியேயும் கண்டுகொள்வேனாக. உன்னை நான் வெளியே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை என்னுள்ளேயும் கண்டுகொள்வேனாக. உள்ளே நிசப்தத்திலும், வெளியே சத்தத்திலும் - உன்னை நான் என்னுள்ளேயும், வெளியேயுமாகக் கண்டுகொள்ள எனக்குக்கற்பி. நான் உன்னை எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள கற்பித்தாயெனில், சத்தமோ நிசப்தமோ, எனக்கு ஒரு பொருட்டல்ல.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
111 Demand to find God at any time and anywhere.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 22 அக்டோபர், 2021

110. உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.

இறைத்தந்தையே, என் தியானமெனும் சிறுபடகு சிதறடிக்கும் சூறாவளியால்  அலைக்கழிக்கப்பட்டு சிரமத்துடன் உன் கரையை நோக்கி நகர்கின்றது. என் மனக்கடல் கொந்தளிக்கின்றது, ஆயினும், நான் உன்னை கரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
110 Master Mariner, come and take charge of my boat.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 21 அக்டோபர், 2021

101. பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் எனும் பிரபஞ்ச நாதமே, என்னுடன் எப்போதும் இரு, என்னை இருளிலிருந்து ஒளிக்கு வழிநடத்து, ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்து, நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு வழிநடத்து, வறுமையிலிருந்து செழிப்பிற்கு வழிநடத்து, துன்பங்களிலிருந்து நிரந்தர ஆனந்தத்திற்கு வழிநடத்து  .
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
101 Demand that Cosmic Sound lead from ignorance to wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

86. சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.

இறைத்தந்தையே, சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிருந்து, அவைகளை நிரந்தர ஆனந்தத்தினையடைய வழிநடத்து.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
86 Be the Pole-Star of my shipwrecked thoughts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 20 அக்டோபர், 2021

85. என் அன்றாட செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் அன்றாடச் செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு.

இறைத்தந்தையே, என் அன்றாட முயற்சிகளின் கப்பலுக்கு நீ மீகாமனாயிருந்து, அதனை பூர்த்தியெனும் கரையையடைய வழிநடத்து.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
85 Be the Captain of my boat of daily activity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

82. தெய்வீகக் காதலின் தீவிரத்தை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வீகக் காதலின் தீவிரத்தை உரிமையுடன் வேண்டுதல்.

பேருணர்வே, ஒரு லோபி எப்படிப் பணத்தை முழுமனத்துடன் விரும்புவானோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. ஒரு குடிகாரன் எப்படி மதுவிற்கு அடிமைப்பட்டுப் பிணைந்திருப்பானோ, அப்படி என்னை உன்னிடம் பிணைந்திருக்குமாறு செய். தவறிழைப்பவர்கள் எப்படி அவர்களின் கெட்ட பழக்கங்களினை விடாமல் இறுக்கப் பிடித்துக்கொள்வார்களோ, அப்படி நான் உன்னை விடாப்பிடியால் பிடித்துக் கொள்ள எனக்குக்கற்பி. ஒரு தாய்  தனது மகவிடம் எப்படி கவனத்தைப் பிசகாமல் வைத்துக்கொண்டிருப்பாளோ, அப்படி நான் உன்மேல் கவனம் வைக்க எனக்குக்கற்பி. உன்னிடமிருந்து நழுவாமல் ஆணியடித்தாற்போல் என் கவனத்தை வைத்துக்கொண்டு, என் கடமைகளை முனைப்புடன் சிரத்தையாக நிறைவேற்ற எனக்குக்கற்பி. ஒரு லோகாயத மனிதன் எப்படி பொருட்களை விரும்பி நாடுவதில் மும்முரமாக இருப்பானோ அப்படி உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. உண்மையான காதலர்களின் முதற்காதலினால், உன்னைக் காதலிக்க எனக்குக்கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
82 Demand for fervor in Divine Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!