சனி, 30 ஜனவரி, 2021

58. என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க  எனக்குக் கற்பி.

என் அதீத-உணர்வுக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க  நான் இறங்கினேன். உறுதிதரும் உற்சாகமூட்டும் எண்ணங்களாலான சிறுமீன்கள் என் மீன்தூண்டிலை வந்து பதம் பார்த்தன. என் கவனமெனும் மீன்தூண்டில்மிதவை தத்தளித்தது, ஒவ்வொரு முறையும் நான் தூண்டிலை மேலிழுக்க, நான் உன்னை நழுவவிட்டேன்.

நான் என் தியான-தூண்டிலில் அன்பின் குழம்புப்பொடியை நன்கு தடவினேன்:  சிறுமீன்கள் வந்து தூண்டிலை இழுத்தன, நான் என் மன தூண்டில்மிதவையை கவனத்துடன் கண்காணித்தேன். ஆஹா! என் மனத்தின் தூண்டில்மிதவை உன் ஆனந்த-அலைகளுக்கடியில் அழுந்தி மறைந்தது. 

என் உணர்வுக் கடலில் வாழும் பிரம்மாண்ட குடியாளனே, நான் உன்னைப் பிடித்திழுத்தேன், ஒரே தாவலில் நீ குதித்து என் நெஞ்சகக் கரைக்கு வந்து சேர்ந்தாய். என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க  எனக்குக் கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
58 Teach me to fish for Thee in the deep waters of my Soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: